Skip to main content

ராஜபாட்டையாக முதல்வராக்க வேண்டும்.. கலைஞர் கூறியது என்ன? மனம்திறந்த துரைமுருகன்!

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
duraimurugan


திமுக ஈரோடு மண்டல மாநாடு இன்று இரண்டாம் நாளாக நடந்து வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக முயலாது என்று கூறிய அவர், மேலும் ஒரு தலைவர் தொண்டர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கலைஞர் தான் உதாரணம். அதேபோல், ஒரு தொண்டன் தலைவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் அவர் தான் உதாரணம்.

உடல்நலக்குறைவாக உள்ள சூழ்நிலையில், அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை சளி தான். ஒரு நாள் மருத்துவர்கள் சளியை வெளியே எடுக்க தொண்டைக்குள் இருக்கும் கருவியை எடுத்து தலைவரை பேச சொன்னார்கள். அப்போது மருத்துவர்கள் உங்கள் பெயர் என்ன? என கேட்டார்கள் உடனே அவர் மு.கருணாநிதி என்றார்.

அடுத்ததாக, உங்களுக்கு யாரை பிடிக்கும் என்றார்கள்? அப்போது, அருகில் இருந்த நான் தலைவர் யாரை சொல்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன், அண்ணியை சொல்லியிருக்கலாம், ஸ்டாலினை சொல்லியிருக்கலாம், ஆனால் தலைவர் அடுத்த நொடியே அண்ணா என்றார்.

ஆக, தான் தலைவராக ஏற்றுக்கொண்ட அண்ணாவை அவர் சொன்னார். இதன் மூலம் தலைவரிடம் ஒரு தொண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. அதேபோல் ஒரு நாள் கடையநல்லூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்ற தொண்டர் ஒருவர் தலைவரை சந்திக்க வீட்டுக்கு வந்தார். அப்போது தலைவரிடம் ராஜமாணிக்கம் தன் உள்ளக் குமுறலை படபடவென தெரிவித்தார். அதற்கு கலைஞர் போய்யா எனக் கடுப்பாக கூறிவிட்டார். அதைக் கேட்ட ராஜமாணிக்கம் அழுதுக்கொண்டே வெளியே சென்றுவிட்டார்.

ஒரு 5 நிமிடம் கலைஞர் தனியாக உட்கார்ந்திருந்தார். அதன்பின் கோபம் தனிந்த பின்னர் என்னிடம், ராஜமாணிக்கத்தை அதிகமாக திட்டிவிட்டேனா? என கேட்டார். நான் இல்லை கொஞ்சமாகத் தான் திட்டினீர்கள் என்றேன். அவர் உடனே போய் அவரை கூப்பிட்டு வா என கூறினார். நான் உடனடியாக அழுதுக்கொண்டிருந்த ராஜமாணிக்கத்தை தலைவரிடம் கூட்டி சென்றேன். உள்ளே சென்றதும், ராஜமாணிக்கம் என்னை மண்ணித்துவிடு, நான் திட்டிவிட்டேன் என்றார். இதைக்கேட்ட ராஜமாணிக்கம் கண்ணீர் விட்டார். இப்படி ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் தலைவர் கலைஞர் தான் உதாரணமாக இருந்தார்.

அந்த இரண்டு பண்புகளும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. அவருடன் நெருக்கமாக இருந்த பார்த்து வருகிறேன். எந்த நேரத்திலும் திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத ஒரு தலைவராக செயல்தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்.

எல்லாரும் கூறுகிறார்கள் தலைவர் கலைஞர் செயல்படுவது மாதிரி இருந்தால், இந்த ஆட்சியை நீடிக்க விட்டிருப்பாரா? எப்போதோ ஆட்சியை கலைத்திருப்பாரே, நாம் ஆட்சிக்கு வந்திருப்போம் என சொல்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிகொள்ள விரும்புகிறேன். கலைஞர் உடல்நலத்துடன் இருக்கும் போது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசிக்கொண்டிருந்தோம் அப்போது, அவர் உடல்நலத்துடன் நீண்ட நாள் இருக்க வேண்டும். அப்படி ஏதாவது ஒரு சூழ்நிலை வந்தால் அந்தகட்சி இரண்டாக உடையும், வலுவான ஒரு கூட்டம் உங்களிடம் வருவார்கள், அப்போது நீங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லி கேட்பார்கள், ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்துவிடக் கூடாது. ஏனெனில் பின் நம் ஆட்களுக்கு கட்சி இருக்காது, அது அழிந்து போய்விடும். அழிந்து போன கட்சிக்கு நம் மூலம் ஒரு வாழ்வு கொடுக்கக் கூடாது என்பது கலைஞரின் விருப்பம்.

அதேபோல், நீங்கள் எல்லோரும் விரும்பவது போல் ஸ்டாலினை முதலமைச்சாரக்க வேண்டுமென்றால் குறுக்கு வழியில் வரக்கூடாது நேர்வழியில் ராஜபாட்டையாக தான் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். திமுக எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் கட்சி கிடையாது. அப்படி ஒரு சூழல் வந்தால் ’ஸ்டாலின் குறுக்கவழியை பிடித்து ஆட்சிக்கு வந்தார் என்று வரலாறு சொல்லும்’. ஏனவே அதுக்கூடாது என கலைஞர் என்னிடம் கூறினார்.

”இந்த ஆட்சியை கலைப்பது மிக சாதாரண விஷயம்”, ஆனால் அதை நாங்கள் செய்யமாட்டோம். நேர் வழியில் திமுக சொல்ல வேண்டும் என்பதற்காக தான் நாம் காத்திருக்கிறோம் என துரைமுருகன் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரியவர் மோடி... சீதைக்கு சித்தப்பா...” - தன் ஸ்டைலில் விளாசிய அமைச்சர்  துரைமுருகன்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Duraimurugan speech on Candidate intro meeting in vellore

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகக் கூட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “யாராக இருந்தாலும் அண்ணா பேரை சொன்னால் தான் தமிழகத்தை ஆள முடியும்.

தி.மு.க.வை நசுக்கிடுவோம் என மோடி பேசுகிறார், நாங்கள் என்ன மகாபலிபுரம பாறையா நசுக்க. நாங்க படா படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது. ராஜகோபால ஆச்சாரியர் எங்களை மூட்டை பூச்சி போல் நசுக்குவேன் என்றார் அவரையே நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம்.

லால்பகதூர் சாஸ்திரி, தனிநாடு கேட்டால் கட்சியை தடை செய்வேன் என்றார். அதை சாமர்த்தியமாக முறியடித்தவர் அண்ணா. அண்ணாவை மட்டும் கலைஞர் சந்திக்காமல் இருந்திருந்தால் கலைஞர் கம்யூனிஸ்ட் வாதியாகி இருந்திருப்பார். அவர் ஒரு சமூகநீதிக்காரர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கத்திலிருந்து அப்போது கல்லூரி சார்பில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தார்கள். நான் இதனை உடனடியாக கலைஞரிடம் போய் சொன்னேன். அதற்கு கலைஞர், ‘எம்.ஜி.ஆர். திரையில் ஆற்றிய தொண்டுக்கு டாக்டர் பட்டத்திற்கு மிக பொருத்தமானவர். நீயே அதை முன்மொழிந்து செய்ய வேண்டும்’ என சொன்னார். இதை அப்படியே எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, ‘தலைவரா அப்படி சொன்னார்’ என மிக உருக்கமாக பேசினார் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்பதை தடுத்து வழங்கச் செய்தவர் கலைஞர்.

தி.மு.க.வை பார்த்து நசுக்கி விடுவேன் உடைத்து விடுவேன் என பேசுகிறார் பெரியவர் மோடி. தி.மு.க.காரன் வெளியில் வரும்போது வாயில் வாய்க்கரிசியைப் போட்டுக் கொண்டு வருபவன். எதற்கும் துணிந்தவன். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் ஏன் சொன்னதையே திரும்ப திரும்ப மேடைகளில் சொல்கிறோம் என்றால். திரும்பத் திரும்ப சொல்லவில்லை என்றால் சீதைக்கு சித்தப்பா ராவணன் என்று விடுவார்கள்” எனப்  பேசினார்.

Next Story

“கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்”  - அமைச்சர் துரைமுருகன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
“We know how to get water from Karnataka”  - Minister Duraimurugan
கோப்புப் படம் 

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே 3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “ஒரு பெட்ரோல் பங்கை திறப்பதற்கு கூட இவ்வளவு பெரிய விழாவா என நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு அரசாங்க பெட்ரோல் பங்க் மக்களுக்கு தரத்துடன் பெட்ரோலை வழங்குவது இதனுடைய நோக்கம். அப்படியானால் தரத்தோடு வழங்காதவர்கள் உண்டா என்றால் உண்டு. பல பேர் கொஞ்சம் பெட்ரோலை போட்டுவிட்டு மண்ணெண்ணெய் கலந்து விடுவார்கள். அப்படிப்பட்ட பங்குகளும் உண்டு நேர்மை இல்லாத பங்குகளும் உண்டு. பெட்ரோல் போடும்போது மீட்டர் சரியாக உள்ளதா என கண்ணில் பார்த்து போட்டுக்கொள்ள வேண்டும் அது நமது கடமை. தரமானதாகவும், நேர்மையானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு  திருப்தி ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இந்தப் பெட்ரோல் பங்க் செயல்பட வேண்டும் என எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘மத்திய அரசு சொன்னாலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளாரே’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு  தண்ணீர் திறந்து விடுவோம் என்று கேள்விப்பட்டது உண்டா. எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணியை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால், இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் திமுக  வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும். ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறித்து கேட்டதற்கு, அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்” என பதிலளித்தார்.