Skip to main content

கலைஞர் பிறவி போராளி, மீண்டு வருவார் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Published on 06/08/2018 | Edited on 06/08/2018

 

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாலை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். 
 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
 

அதனைத் தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைவர் கலைஞர் பிறவிலேயே போராளி. பின்னடைவில் இருந்து மீண்டு வருவார். திமுகவினருக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் கலைஞர் தலைவர் என்றார். 

 

சார்ந்த செய்திகள்