Skip to main content

ஒரே ஊரில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை- சுகாதாரத்துறை அதிர்ச்சி!

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

mm

 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளது  என்ற தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்