Skip to main content

சாப்பாடு போட கூட இந்த எடப்பாடி ஆட்சிக்கு  வக்கு  இல்லை!  குமுறிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்!!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
j

 

தமிழகம் முழுவதும் உள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன  உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் இந்த போராட்டத்தின் போது கடந்த 3 நாட்களாக சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒன்பது ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் என மொத்தம் 15 பேர் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் 26ஆம் தேதி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

jo

 

 இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழும் நாள் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் திண்டுக்கல் யூனியன் ஆபீஸ் அருகே நடந்தது.  இதில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர் . இப்படி போராட்டத்தில் குதித்த அரசு  ஊழியர்கள் ஆசிரியர்களை  கைது செய்து திண்டுக்கல் நகரில் உள்ள 5-க்கும் மேற்பட்ட திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.  இப்படி தங்க வைத்திருந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை இரவு 9 மணி வரை வெளியே விடாமல் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.  அப்பொழுது போராட்டத்தில் இருந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் விடுதலை செய். விடுதலை செய் இல்லையென்றால் சாப்பாடு போடு என கோஷம் போட்டனர். அப்படி இருந்தும் காக்கிகள் கண்டுகொள்ளவில்லை. இதுபற்றி போராட்டத்தில்  ஈடுபட்டு மண்டபத்தில் இருந்த அரசு ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது தொடர்ந்து ஏழு நாட்கள் நடந்து வரும் எங்கள் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தினசரி கைதுசெய்து மண்டபத்தில் அடைத்து விடுகிறார்கள். இப்படி அடைக்க கூடிய எங்களுக்கு சாப்பாடு கூட போடுவதில்லை.

 

 தினசரி மாலை    ஆறு  மணிக்கு விடுதலை செய்து வந்தனர்.  ஆனால் தற்பொழுது 91/4 மணி  மணிக்கு தான் விடுதலை செய்தனர்.   ஆனால் விடுதலை செய்வதில் காலதாமதம் ஆவதை கண்டு சாப்பாடு போடச் சொல்லி போலீசாரிடம் வலியுறுத்தியும் கூட கண்டுகொள்ளவில்லை.  அந்த அளவுக்கு இந்த எடப்பாடி அரசு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாப்பாடு போடக் கூட வக்கில்லை.  அதனால எங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள்  போராட்டத்தில் இருந்த அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிஸ்கட்டுகளும்‌‌, குடி தண்ணிபாட்டிலையும் வாங்கி கொடுத்தனர். ஆனால் இந்த எடப்பாடி அரசு கடந்த சில நாட்களாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பில் இருப்பவர்களை கைது செய்து வருகிறார்கள். அதுபோல் இன்றைக்கும் எங்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 39 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதை வன்மையாக கண்டிக்கிறோம்.  உங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .

Next Story

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ‘ஜாக்டோ - ஜியோ’

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Indefinite strike; Jacto refused to accept the minister's request - Geo

திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என  ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்துள்ளது.