Skip to main content

திருநங்கைகளுக்கு தொழில்திறன் பயிற்சி மற்றும் சுயதொழில் துவங்க நிதியுதவி

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
திருநங்கைகளுக்கு தொழில்திறன் பயிற்சி மற்றும் சுயதொழில் துவங்க நிதியுதவி



இராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை மற்றும் சத்துணவு திட்ட துறையின் மூலம் திருநங்கைகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அடையாள அட்டை, தொழில் திறன் பயிற்சிகள், சுய தொழில் தொடங்க நிதியுதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் திருநங்கைகளுக்கு கடந்த 7 நாட்கள் தொழில்பயிற்சி நடைபெற்றது.

இதில் 16 நபர்களுக்கு திருநங்கைகளுக்கான அடையாள அட்டை மற்றும் தொழில்பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.மேலும் 10 நபர்களுக்கு சுயதொழில் செய்வதற்க்காக ரூபாய் 20,000 வீதம் 2,00,000க்கான காசோலை வழங்கப்பட்டது.மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி,மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் குணசேகரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலாஜி.

சார்ந்த செய்திகள்