Skip to main content

கூலிப்படையால் லாரி டிரைவர் கடத்திக் கொலை... ஆய்வாளர், ஆளும் கட்சிப் புள்ளி மீது வழக்கு!!

Published on 18/09/2020 | Edited on 20/09/2020
INCIDENT IN THATTARMADAM

 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் சரகத்திற்குப்பட்ட சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த காலமான தனிஸ்லாஸ் என்பவரின் மகன் செல்வன். இவர்களின் குடும்பத்திற்கும் அந்தப் பகுதியின் அ.தி.மு.க. புள்ளியான திருமணவேல் என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக செல்வன் அவரது சகோதரன் பீட்டர் ராஜன் ஆகியோர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்னர். ஆனால் திருமணவேலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தட்டார்மடம் காவல் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லையாம். மாறாக திருமணவேலின் புகார் மீது நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் செல்வன் மற்றும் சகோரர்கள் மீது குற்ற எண் 177+ 179/2020படி வழக்குப் பதிவு செய்து கைது செய்தவர் அடித்துத் தாக்கி அவர்களைச் சிறையிலும் அடைத்திருக்கிறார்.

 

INCIDENT IN THATTARMADAM


இதனிடையே லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வரும் செல்வனை மூன்று முறை திருமணவேலின் தரப்புகள் தாக்கியதாகத் தெரிகிறது. அதனைப் புகார் செய்த செல்வத்தின் புகார் மீது இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்தே தனது புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் மீது நடவடிக்கைக்காக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார் செல்வம். அந்த மனு மீதான பதிலளிக்கும்படி நேற்றைய தினமான 16.09.2020க்கு அன்று இன்ஸ்பெக்டருக்கு தாக்கீது வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமாகியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன்.

இந்த நிலையில் நேற்று மதியம் சாத்தான்குளத்திற்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு தனது பைக்கில் திரும்பியிருக்கிறார் செல்வம். அவர் கொழுந்தட்டு விலக்கு பக்கம் வரும் சமயம் இன்னோவா கார் TN.69.K.8957ல் வந்த மர்ம நபர்கள் சிலர் செல்வத்தை வழி மறித்துக் கடத்திச் சென்றவர்கள் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக செல்வத்தைத் தாக்கியதாகத் தெரிகிறது. குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த செல்வத்தை அந்த கும்பல் கடக்குளம் பகுதியில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

 

INCIDENT IN THATTARMADAM


செல்வம் துடிப்பதைப் பார்த்த சிலர் அவரைக் சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுப் வழியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி.ஜெயக்குமார் விசாரணை மேற் கொண்டிருக்கிறார்.

 

INCIDENT IN THATTARMADAM


நடந்தவைகளை எல்லாம் தன் புகாரில் தெரிவித்த செல்வத்தின் தாய் எலிசபெத்,  திருமணவேல் அவருக்கு ஆதரவாரச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் தன் மகன் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு திசையன்விளை காவல் நிலையத்தில் பகார் செய்திருக்கிறார்.

அவர்கள் கொடுத்த புகாரின் படி திருமணவேல், மற்றும் இன்ஸ்பெக்டர் மீது எப்.ஐ.ஆர். ஆகியுள்ளது. அடுத்து விசாரணைக்குப் பின்பு நடவடிக்கை என்று நம்மிடம் தெரிவித்தார் நெல்லை சரக டி.ஐ.ஜி.யான பிரவீன்குமார்.

மேலும் இந்தக் கடத்தல் கொலை சம்பவத்தில் கூலிப்படையின் செயல்பாடுகளிருப்பதாகச் சந்தேகித்த போலீஸ் விசாரணை, அதன் ரூட்டிலும் செல்கிறது. முதலில் சாத்தான்குளம் போலீஸ் டார்ச்சர் அடுத்த தொற்றாக பக்கம் உள்ள தட்டார் மடம் டார்ச்சர் அம்பலமேறியுள்ளது.

 

INCIDENT IN THATTARMADAM

 

திசையன்விளை காவல் நிலையத்தின் முன்பு திருமணவேல், இன்ஸ் ஹரிகிருஷணன் இருவரையம் கைது செய்யும்படி செல்வம் மனைவி செல்வ ஜீவிதா மற்றும் நாம் தமிழ்ர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.