Published on 23/10/2019 | Edited on 23/10/2019
வேலூர் மாவட்டத்தை நிர்வாக ரீதியாக மூன்றாக பிரித்து நிர்வாகம் செய்து வருகிறது திமுக தலைமை. அதன்படி வேலூர் மேற்கு மாவட்டத்துக்கு வழக்கறிஞர் முத்தமிழ்செல்வியை பொறுப்பாளராக நியமித்து கட்சி பணியை செய்து வருகின்றனர்.
![incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/UMIQAHmNu62s_vpctJFeKsvnPF0bJ8f8tCstdiv9TrM/1571830527/sites/default/files/inline-images/DMK%20IN.jpg)
இவரது கணவர் கார்த்திகேயன். இவரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதோடு, குடும்ப பிரச்சனைகாரமாக மனதேவனையிலும் இருந்து வந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 22ந்தேதி நள்ளிரவு இறந்துள்ளார். இந்த தகவல் திமுக தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் உடல் ஜோலார்பேட்டையில் உள்ள அவர்களது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுகவின் மாநில, மாவட்ட, பிற மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.