Skip to main content

வாடகைக்கு வீடு பிடித்து போலி மதுபானம் தயாரிப்பு! 

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

illegal liquor production

 

திருவெறும்பூர் அருகே உள்ள மணிகண்டம் செட்டி ஊரணி பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டை காரைக்காலைச் சேர்ந்த சௌந்தரராஜன் கார்த்திக் (35) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவா் வாடக்கைக்கு எடுத்த வீட்டில் தன்னுடைய நண்பா்கள் மூலம் பாண்டிச்சேரியில் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை வாங்கி வந்து திருவாரூர் பாலமுருகன் (32), வெற்றிச்செல்வன் (22), விஜயகுமார் (23),  சூர்யா (25) ஆகியோரை வைத்து போலி மதுபானங்களை தயாரித்து  கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்.


இது தொடர்பாக மது அமலாக்க தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது கார்த்திக், பாலமுருகன், வெற்றி செல்வன், சூர்யா, விஜயகுமார், ஆகிய 5 பேரும் போலி மதுபானங்களை பாட்டிலில் நிரப்பி ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டிருந்தபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 1,700 மதுபான பாட்டில்கள், இன்னோவா கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


அதன் அடிப்படையில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் வெள்ளசாமியைத் தேடி வருகின்றனர்.


இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பிலான மதுபானங்களை திருச்சி அருகே உள்ள இருங்களூர் வனப்பகுதியில் டி.எஸ்.பி முத்தரசு தலைமையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மற்றும் போலீசார் அழித்தனர். மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன்(36), காரைக்கால் பகுதி கார்த்திக் (33) ஆகிய இருவர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.