Skip to main content

தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ''இளையராஜா 75'

Published on 12/12/2018 | Edited on 12/12/2018
ILAYARAJA

 

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இசைஞானி, மேஸ்ட்ரோ என போற்றப்படும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு ''இளையராஜா 75'' தலைப்பில் பாராட்டுவிழா எடுக்க இருப்பதாகவும், வரும்  பிப்ரவரி 2 ,3 தேதிகளில் இந்த விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் தென்னிந்திய தயாரிப்பளார் சங்கம் தெரிவித்துள்ளது. 

 

இந்த விழா நடைபெறும் அந்த இரு தினங்கள் அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை எனவும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

  

சார்ந்த செய்திகள்