Skip to main content

அரசு மருத்துவமனை எக்ஸ்ரே இயந்திரத்தை கடத்த முயற்சித்தால் மக்களை திரட்டி போராடுவேன்: திமுக எம்.எல்.ஏ. மெய்யநாதன் 

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
sm

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ள புதிய ரூ.50 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தை கடத்த முயற்சித்தால் மக்களை திரட்டி போராடுவேன் என்று திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் சுகாதாரதுறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  

 புதுக்கோட்டையில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரால் தொடங்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை நல்ல முறையில் செயல்பட்டு வந்த நிலையில் மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டதும் நகரின் மையப்பகுதியில் இருந்த  மாவட்ட மருத்துவமனைக்கு மூடுவிழா நடத்தப்பட்டு முதல் பெண் மருத்துவரின் பெயரும் மறைக்கப்பட்டு வருகிறது.
   அதனால் மாவட்ட மருத்துவமனையாக ஆலங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் ஆலங்குடி தொகுதி திமுக வசம் உள்ளதால் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. அதனால் அறந்தாங்கிக்கு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்வதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அங்கு உள்ள சமஉ வும் அமமுக ரெத்தினசபாபதி என்பதால் அறந்தாங்கியிலும் அதற்கான பணிகள் நடக்கவில்லை. 


   இந்த நிலையில் ஆலங்குடி சுற்றியுள்ள சுமார் 200 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடல்நலக் கோளாறு என்றால் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சமீப காலமாக போதிய மருத்துவ உபகரணங்களும் மருத்துவர்கள், செவிலியர்கள் டெக்னீசியன்கள் இல்லாமல் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரையும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அங்கு சரியான கவணிப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டகள் எழுந்ததால் ஆலங்குடி அரசு மருத்துவமனையை சீரமைக்க வேண்டும் மருத்துவ கருவிகள் வழங்க வேண்டும் என்று ஆலங்குடி திமுக சமஉ மெய்யநாதன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.


இந்த நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் உள்பட பல இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய இயந்திரம் வைப்பதற்காக ஒரு கட்டிடத்தில் தனி அறை வண்ணம் தீட்டப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருந்த நிலையில் விலை உயர்ந்த அந்த இயந்திரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல சுகாதார துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 


இந்த நிலையில் இன்று ஆலங்குடி திமுக எம் எல் ஏ மெய்யநாதன் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்த  பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது.. ஆலங்குடி அரசு மருத்துமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மறுத்துவிட்டார்கள். ஆனாலும் தொகுதி மக்கள் பயனடைய வேண்டும் என்று மருத்துவர்கள், உபகரணங்கள், வேண்டும் என்றும்  ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும என்றும் கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு ரூ.50 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது அதை வேறு இடத்திற்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ கடத்தி செல்ல திட்டமிட்டள்ளனர். ஆகவே தான் இன்று ஆய்வு செய்தேன். இந்த இயந்திரத்தை சில நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி திறக்க வைப்போம் என்றவர்.
 

  புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டு சென்றால் அலட்சியமாக செயல்படுவதால் சில நாட்களுக்குள் பல உயிர்கள் போயுள்ளது. பார்த்திபன் என்ற போலிஸ்காரருக்கே உரிய சிகிச்சை இல்லை என்பதால் நல்ல இளைஞரின் உயிர் போய்விட்டது. இந்த அலட்சிய போக்கை சுகாதாரதுறை அமைச்சர் கவணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் ஆலங்குடிக்கு வந்துள்ள இயந்திரத்தை வேறு ஊருக்கு வந்தது மாற்றி இறக்கிவிட்டதாக காரணம் சொல்ல தயாராகி உள்ளார்கள். இன்னும் சில நாட்களில் சுகாதார துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தான் என்றார். 


    

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.