Skip to main content

எட்டு வருடமாக எட்டிப்பார்க்காததால் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை! திண்ணை பிரச்சாரத்தில் ஐ.பி.யிடம் குமுறிய மக்கள்!!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியில் திமுக சார்பில் சௌந்திரபாண்டியனும், அதிமுக சார்பில் தேன்மொழியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தங்கதுரையும் களமிறங்கியிருக்கிறார்கள்.

 

இதில் திமுக வேட்பாளரை ஆதரித்து கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் திமுக வேட்பாளரான சௌந்தரபாண்டியனை அழைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.

 

ஆனால் இந்த இடைத்தேர்தல் மூலம் தொகுதியை திமுக கோட்டையாக உருவாக்க வேண்டும் என்ற முழு மூச்சுடன் கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தனிக்கவனம் செலுத்தி தனிமையில் தொகுதியில் வலம் வருகிறார்.

 

iperiyasami

 

அதிலேயும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு ஐபியின் சொந்த ஊர் என்பதால் இந்த வத்தலக்குண்டு ஒன்றியத்தில் உள்ள கோம்பபட்டிக்கு சென்ற ஐ.பி. பெரியசாமிக்கு அப்பகுதி மக்கள் சால்வை,மாலை போட்டு வரவேற்பு கொடுத்தனர். 

 

 

அப்பொழுது மாற்று கட்சியான அதிமுக,பாம.க,தேமுதிக கட்சியிலிரூந்து விலகி 300க்கு மேற்பட்டோர் ஐ.பி.முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். 

 

iperiyasami

 

அதன் பின் ஊர் திண்ணைக்கு வந்த ஐ.பி.யிடம்... கடந்த 8 வருடங்களாக எம்எல்ஏக்கள் இந்த பக்கமே வரவில்லை. அதுபோல் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் குடிக்க கூட தண்ணீர் இல்லை எனவே வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் முறையிட்டதை கண்ட ஐ.பி. உடனே உங்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கிறேன் நீங்கள் அவசியம் வரக்கூடிய தேர்தலில் பாராளுமன்றத்துக்கு வேலுச்சாமிக்கும், சட்டமன்றத்திற்கு சௌந்திர பாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

 

 

அதைத்தொடர்ந்து கரட்டுப்பட்டிக்கு சென்ற திமுக வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஆதரவு கேட்டார். 

 

iperiyasami

 

அதன்பின்  பேசிய ஐ பெரியசாமி... திமுக ஆட்சியின்போது இப்பகுதியில் உள்ள முதியோர் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருந்தேன். அதை திடீரென நிறுத்தி விட்டனர். அதற்காக நான் சட்டமன்றத்தில் கூட போராடினேன் அப்படி இருந்தும் உங்களுக்கு இன்னும் முதியோர் உதவித்தொகை வரவில்லை. அடுத்து வரக்கூடிய ஸ்டாலின் ஆட்சி மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும். அதை சட்டமாகவே திமுக தலைமையிடம் சொல்லி அமுல்படுத்த இருக்கிறேன். 

 

 

அதுபோல் மத்திய அரசான மோடி அரசு மக்களை ஏமாற்றுவதற்காக வருஷத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறது. ஆனால் பிரதமராக வரக் கூடிய ராகுலோ மாதத்திற்கு 6000 ரூபாய் என வருஷத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுக்க இருக்கிறார். அதுபோல் விவசாய கடன்,கல்விக் கடன்  தள்ளுபடி செய்ய இருக்கிறார்கள். அதுபோல்  பிள்ளைகள் இனி டாக்டருக்கு படிக்க எந்த தடையும் இல்லாத அளவுக்குத நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். அதனால் வரக்கூடிய இந்த தேர்தலில் பாராளுமன்றத்திற்கு வேலுச்சாமிக்கும், சட்டமன்றத்திற்கு சௌந்திர பாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்குகள் மூலம் தான் நம்மை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை வீட்டுக்கு அனுப்ப முடியும். அதுபோல் மாநிலத்திலுள்ள மக்களை மதிக்காத இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்புவதுதின் மூலம்  கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார் எனக்கூறினார். 

 

 

மேலும் அதை தொடர்ந்து குளிர் பெட்டி, மீனாட்சிபுரம், பிச்சம்பட்டி, ஐயன் கோவில்பட்டி, கண்ணாபட்டி,செம்மடைப்பட்டி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஐ.பி.புது பாணியில் தனிமையில் சென்று வாக்காள மக்களிடம் வேலுச்சாமிக்கும் சௌந்தர பாண்டியனுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்