Skip to main content

“மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நான் இம்முடிவை எடுத்துள்ளேன்” - டாஸ்மாக் ஊழியர்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

"I have made this decision because I am very depressed" - Tasmac employee

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா சிவஞானபுரம் டாஸ்மாக் கடை எண்: 10138இல் விற்பனையாளராக நாகராஜன் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த வருடம் 5/10/2020 அன்று மேற்கண்ட கடைக்கு விற்பனையாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் வேலையில் சேர்ந்த நாள் முதல் “நீ உடல் ஊனமுற்றவன், உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என இழிவாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்திருக்கின்றனர். மேலும், மேலதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார் மாற்றுத்திறனாளியான டாஸ்மாக் ஊழியர்.

 

இதனால் திங்கட்கிழமையன்று, (26.07.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விற்பனையாளர் நாகராஜன், “கடந்த வருடம் 05/10/2020 அன்று மேற்கண்ட கடைக்கு விற்பனையாளராக மாற்றம் செய்யப்பட்ட நாள் முதல், ‘நீ உடல் ஊனமுற்றவன். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.’ என தினசரி என்னைக் கேலி பேசியுள்ளார் கடையின் சூப்பர்வைசரான சரவணன். இதுகுறித்து மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோரிடம் தபாலிலும் தொலைபேசியிலும் புகாரளித்தேன்.

 

இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பணியும் செய்ய முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நான், இம்முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறி தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகில் இருந்த காவல்துறையினரால் அவரது தீக்குளிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு, தொடர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

படம்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.