Skip to main content

திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

c

 

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூரில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. நாளையும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருப்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி விடுமுறை அறிவித்துள்ளார்.

 

திருப்புதல் தேர்வு நடைபெறுவதால் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இந்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்