Skip to main content

"விதை மற்றும் உர விற்பனையில் பதுக்கல்களை கண்காணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம்  

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

"Hoarding Committee on Seed and Fertilizer Sales has been set up" - Minister M.S. RK Panneerselvam

 

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கடலூர் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின்போது கடலூரில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல், மக்கள் பயன்பாடு அல்லாமல் புதர்மண்டி மூடியே இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் சட்டமன்ற உறுப்பினராக திமுக உறுப்பினர் கோ. ஐயப்பன் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுப்பொலிவுடன் மக்கள் பயன்பாட்டிற்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நேற்று (13.06.2021) திறக்கப்பட்டது.

 

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருண்ட ஆட்சி இருந்ததற்கு உதாரணமாக புதர் மண்டியும், பாம்புகளின் கூடாரமாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத அலுவலகமாகவும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திகழ்ந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிடும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிகாட்டும் மையமாக கடலூர் சட்டமன்ற அலுவலகம் இனி இயங்கும்" என்றார்.

 

"Hoarding Committee on Seed and Fertilizer Sales has been set up" - Minister M.S. RK Panneerselvam

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "மேட்டூர் அணை திட்டமிட்டபடி 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார். முதல்வரின் தொடர் நடவடிக்கையால் மேட்டூர் அணை திறப்பு விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. காவிரி டெல்டா பகுதி மட்டுமின்றி மேட்டூர் அணை பாசன வசதிபெறும் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாய பணிகள் சிறப்புடன் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே விதை மற்றும் வேளாண் இடுபொருட்கள் அந்தந்த பகுதிக்கு குறைவின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி விதை மற்றும் உரங்கள் அனைத்து விவசாய தரப்பினருக்கும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரமான விதை மற்றும் உர விற்பனையில் பதுக்கல் உள்ளிட்டவை இல்லாமல் விவசாயிகள் முழுப்பயனையும் பெறும் வகையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி முழு பாசன வசதி பெறும் வகையில் காவிரி நீர் கடைமடைவரை சென்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூர்வாரும் பணி முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் கடலூர்  சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இள. புகழேந்தி, திமுக மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்டப் பொருளாளர் குணசேகரன், நகரச் செயலாளர் ராஜா, முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், வி.ஆர். அறக்கட்டளை நிர்வாகி விஜயசுந்தரம், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத் தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.