Skip to main content

தூத்துக்குடியில் அமைதி நிலவவே முன்னுரிமை- மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Published on 24/05/2018 | Edited on 25/05/2018

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் இறந்துள்ள நிலையில் மூன்றாவது நாளான இன்று தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த துப்பாக்கி சூடு கலவரத்தில் நடந்த சேதங்கள் குறித்து  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தியார்லர்களை சந்தித்து பேசினார்,

 

police

 

 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு கலவரத்தில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். அதில் 11 பேர் ஆண்கள், 2 பெண்கள். அதேபோல் போலீசார் தரப்பில் 34 பேர் காயமடைந்துள்ளனர் அதில் 24 பேர் ஆண் காவலர்கள், பெண் காவலர்கள் 10 பேர்.

 

இந்த கலவரத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள் மொத்தம் 24 கார்கள். அதில் 9 அரசாங்க வாகனங்கள் 15 தனியார் வாகனங்கள். 74 பைக்குகள் என மொத்தம் கார்கள் மற்றும் டூ வீலர்கள் என 98 வாகனங்கள் தீயில் முழு சேதமாகியுள்ளனது.

 

அதுபோல் அடித்து நொறுக்கப்பட்டு சேதமான வாகனங்கள் எண்ணிக்கை 35 கார்கள். அதில்19 அரசாங்க கார்கள் 16 தனியார் கார்கள். 11 மோட்டார் சைக்கிள்கள்  என ஒட்டுமொத்த வாகனங்களின் சேதம் 46 ஆகும். இப்படியாக வாகனங்களின் மொத்தம் 36 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

அதுபோல் பொதுச்சொத்துக்களின் சேத மதிப்பு 29 லட்சங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.  நிவாரண நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் தூத்துக்குடி மருத்துவமனையில் வாட்டர் டாங்க் மூலம் தண்ணீர் வசதி மற்றும் மருத்துவனை அருகிலுள்ள அம்மா உணவகம் மூலம் 24 மணிநேரமும் இலவச உணவு விநியோகிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு நல்ல தரமான சிகிச்சைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் நிலவும் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது  தூத்துக்குடியில் அமைதி திரும்பவர முன்னுரிமை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.