Skip to main content

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டியவர்களுக்கு பரிசு

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
helmet

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மாவட்டந்தோறும் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
 

அந்த வகையில் விழுப்புரம் நகர காவல்துறையும், போக்குவரத்து காவல் துறையும் இணைந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், பாலமுருகன், போலீஸ் நண்பர்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
 

மேலும் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கும் மற்றும் ‘ஹெல்மெட்’ அணிந்தவாறு பின்னால் அமர்ந்தவர்களுக்கும் போலீசார், பரிசு பொருளை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இப்போ விழுமோ எப்போ விழுமோ? - ஹெல்மெட்டுடன் பணியாற்றும் அரசு ஊழியர்கள்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

 'Now or when will it fall?'-Government employees working with helmets

 

அரசு அலுவலகக் கட்டடம் பாழடைந்து கிடக்கும் நிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றும் வினோத சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

 

தெலுங்கானாவில் ஜெகத்தியாலா மாவட்டம் பீர்பூர் நகரில் உள்ளது மண்டல பரிஷத் அலுவலகம். இந்த அலுவலகத்தின் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உள்ளனர். பலமுறை வேறு கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்றும்படி ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கோரிக்கை வைத்த போதிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் அங்கே பணி செய்யத்தான் வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் உள்ளாகியுள்ளனர். எப்பொழுது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள், ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே இந்த அலுவலகத்தின் சில இடங்கள் இரண்டு முறை இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

Next Story

பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; கோவை மாநகரக் காவல் அதிரடி

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக் கோவை மாநகரக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

கோவையில் நிகழும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் கோவை மாநகரக் காவல்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவதோடு பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.