Published on 14/11/2018 | Edited on 14/11/2018

கஜா புயல் நாளை கரையை கடக்கவிருக்கிற நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில், பார்வதிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் பகுதிகளில் தற்போது கனமழைக்கு பெய்து வருகிறது.
அதேபோல் கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் பல்கலைக்கழக கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.