Skip to main content

அரசு தாலுகா மருத்துவமனை; குற்றச்சாட்டும் விளக்கமும்!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

Government Taluka Hospital; Accusation and explanation

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேனின் அலட்சியப் போக்கால் உயிர்ப்பலிகள் ஏற்படுவதாக வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமையில் அரசு மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரபாகரன், “கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு இரத்த காயத்துடன் சென்றால் மருத்துவர்களுக்கு மயக்கம் வந்துவிடுகிறது. உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள், முகத்தில் அடிபட்டால் முகக்கவசத்துடன் வாருங்கள், கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் டெக்னீசன் இல்லை என்கிறார்கள்.

 

இல்லை என்றால் இராமநாதபுரம் செல்லுங்கள் என்கிறார்கள். பிரசவ வலியோடு பெண் சென்றால் நான்கு பேர் என்றால் தான் பிரசவம் பார்ப்போம் ஒரு நபர் என்றால் இராமநாதபுரம் செல்லுங்கள் என்கிறார். இதைவிட மோசம் பிணவறை இங்கு மின்சார வசதியோ, குளிர்சாதன அறையோ கிடையாது, குளிர்சாதனப் பெட்டி இறந்தவரின் உறவினர்களே கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். ஆனால் குளிர்சாதன பெட்டி வைப்பதற்கு மின்சாரம் கிடையாது. பிணவறையில் எலி, பெருச்சாளிகள், பூரான்கள் துள்ளி விளையாடுகின்றன. அங்கு எப்படி இறந்தவரின் உடலை வைப்பது. குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மருத்துவரோ, செவிலியர்களோ இருப்பது இல்லை.

 

Government Taluka Hospital; Accusation and explanation

 

முதலுதவி செய்ய வேண்டும் என்றால் கூட உயிர் போனவுடன் கரெக்ட்டாக வந்து அவர் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுவது, அவருக்கு முதலுதவிக்கு வருவது இல்லை. ஆனால் இறந்துவிட்டார் என கூற வந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் முழுக்காரணம் மக்களை மதிக்காத அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேனை இடமாற்றம் செய்ய வேண்டும். பிரசவம் பார்பதற்கு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும். சிறு மழைக்கே தாங்காத கட்டிடத்தைப் பழுது பார்க்க வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கோரிக்கை வைத்தார். மேலும் இதில் பெரியார் பேரவை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், வி.சி.க நகர் செயலாளர் பாசித் இலியாஸ், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நதீர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதுகுறித்து நாம், கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேனிடம் கேட்டபோது அவர், “இதுவரை பொதுமக்கள் யாரும் என்னிடம் இப்படி புகார் சொன்னதில்லை. தவறுகள் ஏதாவது இருந்தால் மக்கள், சென்னையில் உள்ள தலைமையிடத்திற்கும் புகார் தெரிவிக்கலாம். ஆனால், இதுவரை யாரும் அப்படி புகார் தெரிவிக்கவில்லை. மேலும், இவர்கள் (போராட்டம் நடத்தியவர்கள்) மருத்துவமனைக்குள் வந்து பார்க்க வேண்டும். நான் என் பணியை முறையாகச் செய்துவருகிறேன்” என்று தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.