Skip to main content

ராட்சத குழாய் வெடித்து சாம்பல் கழிவு வெளியேற்றம்... மக்கள் அவதி!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Giant pipe explodes and ash discharges ... People suffer!

 

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ராட்சத குழாய்களிலிருந்து சுடு நீருடன் சாம்பல் கழிவுகள் வெளியேறுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

 

வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளது. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்தாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக நிலக்கரி கொண்டு வரப்பட்டு, நிலக்கரி எரிக்கப்பட்டு மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது அதிலிருந்து வரும் சாம்பல் கழிவுகள் வெளியேறும். அப்படி வெளியேறும் சாம்பல் கழிவு வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள செப்பாக்கம் என்ற பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 1,126 ஏக்கர் பரப்பளவில் உள்ள சாம்பல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சாம்பல் குளத்தில் இந்தக் கழிவுகள் குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் தற்போது சாம்பல் கழிவுகளை எடுத்துச் செல்லும் அந்த ராட்சத குழாய்களில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக, சுடு நீருடன் சாம்பல் கழிவுகள் வெளியே பீச்சி அடித்தது. இதனால் அந்தப் பகுதியே சாம்பல் கழிவுகளாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் பிரச்சாரம்! (படங்கள்)

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநிலத் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். 

அந்த வகையில், திமுக வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி ஜி. கே.எம். காலனி, பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது,  கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் வாக்களிக்கும்படி, கேட்டுக் கொண்டார்.

Next Story

வடசென்னை தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் பைக் பிரச்சாரம்!(படங்கள்)

Published on 13/04/2024 | Edited on 13/04/2024

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடசென்னை அதிமுக வேட்பாளர் மனோவை ஆதரித்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகரில்  திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் தேர்தல் பொறுப்பாளரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் 600 பெண்கள் கருப்பு புடவை அணிந்து  ஜெயலலிதாவின் முகம் பதித்த போட்டோவை முகத்தில் அணிந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, விலைவாசி உயர்வைப் பட்டியலிட்ட பதாகைகளுடன் அரிசி, பருப்பு, பூண்டு உள்ளிட்ட மளிகை பொருட்களை கழுத்தில் மாலையாக தொங்கவிட்டபடி இ.பி.எஸ் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனங்களில்  இரு பெண்கள் அமர்ந்து கையில் அ.தி.மு.க. கட்சி நிறம் கொண்ட பலூன்களுடன் பேரணியாக  வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து தொகுதி முழுக்க தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. 

பேரணி  ஊர்வலமானது 47 - வது வட்டம் கொருக்குப்பேட்டை சி.பி.ரோடு ஹரிநாராயணபுரத்தில் தொடங்கப்பட்டு, கிளாஸ் பாக்டரி,  கே.எச்.சாலை இ.எச்.ரோடு வைத்தியநாதன் மேம்பாலம், இளைய முதலிதெரு, வ.உ.சி நகர் மெயின் ரோடு, மார்கெட் தெரு, சேனியம்மன் கோவில் தெரு, ஜீவாநகர், எல்.ஐ.ஜி.காலனி, ஏ.இ.கோவில் தெரு, தியாகி பெருமாள் தெரு, டி எச் ரோடு, வீரராகவன் தெரு, எஸ்.என்.செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை, வரதராஜ பெருமாள் கோவில், இரட்டைக் குழி தெரு, ராதாகிருஷ்ணன் நகர், தியாகப்பத்தெரு, மண்ணப்ப முதலி தெரு ஆகிய முக்கிய வீதிகளில் பயணித்து பேரணிப் பிரச்சாரத்தை முடித்துவைத்தனர்.