Skip to main content

கஜா புயல், ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்களுக்கிடையே  பள்ளிக்கு கல்வி சீர் கொடுத்த நெடுவாசல் மக்கள்

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 


கடந்த ஆண்டு 196 நாட்கள் வரை ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடிய மக்கள் கடந்த சில மாதங்களாக கஜா புயல் தாக்கத்திலிருந்து மீள போராடி வருகிறார்கள் நெடுவாசல் மக்கள். போராட்டமே வாழ்க்கையாகிப் போனது விவசாயிகளின் வாழ்க்கை. நாம் வாழப் போராடினாலும் நம் பிள்ளைகள் இந்த துயரங்களை மறந்து நல்லா படிக்க வேண்டும் என்று அவர்கள் படிக்கும் அரசு பள்ளிக்கு கடந்த மாதம் மறைந்த தோழர் முத்துக்குமரன் அறக்கட்டளை சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்களும் காலனிகளும் வழங்கினார்கள் இளைஞர்கள். இப்போது நெடுவாசல் கிழக்கு அரசு பள்ளிக்கு தேவையான கற்றல் உபகரணங்களை தென்னங்கன்றுடன் சேர்த்து கிராம மக்கள் வழங்கி சிறப்பித்துள்ளனர். 
 

f

 

 புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள்  சார்பில்  ரூ.1 லட்சம் மதிப்பில் கல்வி சீர் வழங்கப்பட்டது.  நெடுவாசலில் தென்னை மரங்கள், தேக்கு,பலா, வாழை என விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால்  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.


    இருப்பினும் தொடக்கப்பள்ளியில் 40 மாணவர்கள் பயில்கின்றனர்.
   இப்பள்ளியை மேம்படுத்தும் விதமாகவும், புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலி, குடிநீர்
சுத்திகரிப்பு கருவி, குடம், வாளி, பாய், துடைப்பான், எழுதுபொருட்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் தென்னங்கன்றுகள் நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று வழங்கினார்கள்.

 

f


      கிராம மக்களுடன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி தலைமையில் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தெட்சிணாமூர்த்தி, சுந்தராசு ஆகியோர் ஊர்வலமாக சென்று சீர் பொருளை  பள்ளி தலைமையாசிரியர் டி.புஷ்பம் மற்றும் உதவி ஆசிரியை முத்துமாரியிடம் வழங்கினார்கள். 
    எத்தனை பாதிப்புகள் வந்தாலும் பள்ளிகளுக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றனர்.
  

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன" - பிஆர்.பாண்டியன்

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r. pandiyan about damages in delta districts

 

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் பி.ஆர்.பாண்டியன் இன்று  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு செய்தபின் பேசும்போது, "தமிழ்நாட்டில் வானிலை மையம் கூட கணிக்க முடியாத வகையில் பருவம் தப்பிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை  டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

அரசு உடனடியாக அந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

 

 

Next Story

"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r.pandiyan reqquest to neduvasal people

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந் தேதி காலை திட்டத்தைக் கைவிடக் கோரி அங்குள்ள கடைவீதியில் விவசாயிகள் 100 பேர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதன் பிறகு இது தொடர் போராட்டமாக மாறியது. நாடியம்மன் கோயில் ஆலமரத்திடல் போராட்டக் களமானது. அதுவரை போராட்டம் என்றால் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தான் வழக்கம். ஆனால் நெடுவாசலில் அப்படியே தலைகீழாக மாறி, போராட்டம் என்பது கலைத் திருவிழா போல நடந்தது. 

 

ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் உரைவீச்சு, சினிமா நட்சத்திரங்கள் எனப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. போராட்டக்களத்திற்கு வந்தவர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார்கள் போராட்டக் குழுவினர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டம் செய்தாலும் இந்த நூற்றாண்டில் நடந்த முக்கியமான அமைதி வழி போராட்டங்களில் ஒன்றாக மாறியது. இந்த போராட்டத்தின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நெடுவாசல் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இது பற்றி அவர் கூறும் போது, "நெடுவாசல் கிராமத்தில் வரலாறு காணாத போராட்டத்தைச் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பகுதி விவசாயிகள் காந்திய வழியில் நடத்தி உலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளனர். எதிர்காலத்தில் இனி விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது. எனவே நெடுவாசல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நெடுவாசல் கிராமத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் அமைப்பதாக  கிராம மக்கள் கூறியுள்ளனர்" என்றார்.