Skip to main content

இந்த ஆட்சியில் சுதந்திர போராட்ட தியாகிக்கு நேர்ந்த கதி! இருந்த வீட்டையும் இடிச்சுட்டாங்க!

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள ஐ.என்.ஏ தியாகி வெள்ளைச்சாமி, சுதந்திர போராட்ட வீரரான அவர் அண்ணாநகரில் குடும்பத்தினருடன் வசிக்கும் வருகிறார்.  வீடு வீட்டு வசதிவாரிய இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார் என அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு கடந்த 15 வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு நடந்து வந்திருக்கிறது. 

 

 freedom fighter home; destroed in thiruchy

 

இந்த நிலையில் காலையில் வீட்டுவசதி வாரியத்தின் செயற்பொறியாளர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் நவல்பட்டு போலிசார் பாதுகாப்புடன் வந்தர். எங்கள் வீட்டுவசதிய வாரியத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தியாகி வெள்ளைசாமியோ எனக்கு எந்த தகவலும் இல்லை, தீர்ப்பும் கிடைக்கவில்லை என்று கூறி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 freedom fighter home; destroed in thiruchy

 

ஆனால் இதை எல்லாம் பொறுப்படுத்தாத அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தியாகி மயக்கம் போட்டு கீழே விழுந்ததுள்ளார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். 

 

இதை எல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் தியாகியின் வீட்டை இடித்தள்ளிவிட்டு சென்றிருக்கிறார்கள். இது குறித்து தியாகிகள் தரப்பில் நாம் விசாரித்த போது. இந்த பகுதி முழுவதும் தியாகிகளுக்கு என்று 5 ஏக்கர் தமிழக அரசால் கொடுக்கப்பட்டது. எல்லோரும் அவர்களுக்கு கொடுத்த இடத்தை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு மாறி சென்று விட்டனர். ஆனால் நாங்கள் இதே இடத்தில் வீட்டு கட்டி இங்கேயே விவசாயம் செய்து வருகிறோம். 

 

 freedom fighter home; destroed in thiruchy

 

இதற்கு இடையில் வீட்டுவசதி வாரியத்துறை இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று வழக்கு தொடர்ந்தனர். திருவரம்பூர் டி.ஆர்.ஓ. தலைமையில் பேச்சுவார்தை நடைபெற்றது. இதில் எங்களுக்கு 2 ஏக்கர் மாற்று இடமும் இங்கே வீட்டு வசதி வாரியத்தால் கட்டும் கட்டிடங்களில்“ 2 வீடு தருவதாகவும் சொன்னார்கள். நாங்கள் எங்களுக்கு மாற்று இடம் வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டோம். 

 

 freedom fighter home; destroed in thiruchy

 

ஆனால் தற்போது எந்தவித முன் அறிவிப்பு இன்று தீடீர் தங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி வீட்டை இடித்து விட்டார்கள். இது தான் சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு இந்த ஆட்சியில் கிடைத்த பரிசு என்று ஆதங்கப்பட்டார். 

 

வீட்டை இடித்தது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.