Skip to main content

நிர்மலாதேவி விவகாரத்தில் அக்கறை! பொள்ளாச்சி சம்பவத்தில் அமைதி!  -பசும்பொன் பாண்டியன் பகீர் குற்றச்சாட்டு!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் நிர்மலாதேவிக்கு, கடந்த 12-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை ஜாமின் வழங்கியது.  இன்று விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவியின் ரத்த உறவான அண்ணன் ரவியும், இன்னொரு குடும்ப நண்பரும் ஜாமின்தாரர்களாக ரூ.10000-க்கு பிணைய சொத்துப் பத்திரங்களை சமர்ப்பித்தனர். அதனை அந்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

 

p

 

விருதுநகரில் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். 

“இன்று மாலை அல்லது நாளை காலை நீதிமன்ற உத்தரவு மதுரை சிறைச்சாலைக்குச் சென்றுவிடும். அனேகமாக, நாளை மாலை நிர்மலாதேவி சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டதும், உடனே பேட்டி கொடுத்தார் கவர்னர். சந்தானம் கமிட்டியையும் உடனே அமைத்தார். பொள்ளாச்சி பயங்கரத்தை மனித இதயம் படைத்தவர்கள் யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், கவர்னர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை; கேட்கவில்லை. கவர்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நிர்மலாதேவி விஷயத்தில் அக்கறை எடுத்த கவர்னர், உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் பொள்ளாச்சி விஷயத்தில் ஏன் அக்கறை காட்டவில்லை?  

 

பொள்ளாச்சியா? எடப்பாடி ஆட்சி பொல்லா ஆட்சியா? பொல்லாத ஆட்சி என்பதற்கு சாட்சியாகத்தான் நடந்திருக்கிறது பொள்ளாச்சி சம்பவம். கவர்னர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா? இதிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். நிர்மலாதேவி வழக்கு பொய் வழக்கு என்பதற்கு இதைவிட சாட்சி எதுவும் இல்லை. நாங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறோம். நிர்மலாதேவி வழக்கு பொய் வழக்கென்று. அவர் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் சொன்னோம். பொள்ளாச்சி சம்பவத்தில் கவர்னர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம்? 

 

n

 

அந்த நேரத்தில், மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தார் நிர்மலாதேவி. அதனால், கவர்னர் தலையிட்டார் என்றார்கள். இப்போது, துணை சபாநாயாகர் மேலேயே குற்றச்சாட்டு இருக்கிறதே? ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு இருக்கிறதே? கவர்னர் ஏன் அமைதியாக இருக்கிறார்? கவர்னர் எல்லாருக்கும் பொதுவானவர்தானே? அவர் மீது குற்றச்சாட்டு வந்தால்தான் பேசுவாரா? அப்போது சந்தானம் கமிட்டி அமைத்தார் அல்லவா? இப்போது பொள்ளாச்சி சம்பவத்துக்காக ஒரு கமிட்டி அமைக்க வேண்டியதுதானே? உண்மைக் குற்றவாளிகளை மறைப்பதற்காக ஏன் வேகவேகமாக குண்டாஸ் போட்டார்கள்? உண்மைக் குற்றவாளிகளை மறைப்பதுதான் எடப்பாடி அரசின் வேலையாக இருக்கிறது. அதற்கு ஒத்தூதுவதுதான் கவர்னருடைய வேலையாக இருக்கிறது. மத்திய சர்க்காரின் வேலையாக இருக்கிறது என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு.” என்றார் ஆதங்கத்துடன். 

 

எடப்பாடி ஆட்சியில் என்ன நடந்தாலும் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்பது தமிழக மக்களின் குமுறலாகவும் இருக்கிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

Next Story

‘3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
'Chance of rain in 3 districts' - Meteorological Department information

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், தூத்துக்குடியின் மாநகர பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பெய்யும் பருவம் தவறிய மழையால் தூத்துக்குடியில் உப்பள தொழில்களை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.