Published on 20/10/2019 | Edited on 20/10/2019
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் தங்கராசுவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளன. மேலும் வேட்டையாடிய 2 மயில்களின் உடலை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தன.
![Former Army officer arrested for hunting peacocks](http://image.nakkheeran.in/cdn/farfuture/jaxw8K0DOy0yR7eKyc5MM6Sqz1oljcslrjzXvp0BXbI/1571551881/sites/default/files/inline-images/Trichy_Central_Bus_Station1111.jpg)
முன்னாள் ராணுவ வீரரான தங்கராசு துவரங்குறிச்சி பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் காவலராக பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.