








Published on 27/03/2020 | Edited on 27/03/2020
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது இடங்களிலும், மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. நேற்று (26.03.2020) சென்னை, கலங்கரை விளக்கம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. காவல் துறை உதவியோடு, தீயணைப்பு வாகனங்களில் கிருமி நாசினியை நிரப்பி, குடியிருப்பு முழுவதும் நனையும்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.