Skip to main content

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Fire at Rajiv Gandhi Hospital in Chennai

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அருகேயுள்ள வார்டுகளில் இருக்கும் நோயாளிகளை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியினை பார்வையிட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்