Skip to main content

பட்டாசு கடையில் தீ விபத்து

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

A fire broke out in a firecracker shop

 

அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையில் இன்று மாலை 3 மணியளவில் விற்பனைக்காக வாங்கி வந்த  பட்டாசுகளை இறக்கிய போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

மேலும் அருகில் இருந்த மதுபானக் கடை உள்ளிட்ட 3 கடைகளிலும் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்து வருகிறது. இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்