Skip to main content

சைலண்டாக வீட்டில் வைத்து ஸ்கேன்; கையும் களவுமாகச் சிக்கிய பகீர் கும்பல்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Finding baby gender at home; The gang is caught in the crosshairs

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வீட்டில் வைத்து சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்த கும்பல் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் இதற்கு முன்பே சில ஆண்டுகளாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவது தொடர்பான கும்பல்கள் பிடிபட்டிருந்தது நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் நான்கு பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து ஒரு கும்பல் சோதனை செய்து தெரிவித்ததாகப் புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள நெற்குந்தி முத்தப்பா நகரில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சந்தேகம் இல்லாத வகையில் வீடு ஒன்றில் சாதாரணமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறும் கும்பல் அதற்கான உபகரணங்களுடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதற்கு ஒருவருக்கு தலா 13,000 பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் அதற்கான கருவிகள் வைக்கப்பட்டு இப்படி செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் செய்து வந்துள்ளார். முருகேசன் மருத்துவம் படிக்காதவர் என்பதும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் சூட்கேஸ் அளவிலான ஸ்கேன் மெஷினை வைத்து வெறும் ஐந்து நிமிடத்திற்குள் கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என்பதைத் தெரிவித்து வந்துள்ளது அந்த கும்பல். தருமபுரியில் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்த கும்பல் மீண்டும் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மோடியின் பெயரில் போதை மாத்திரை; பாஜக நிர்வாகிக்குச் சம்மன்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Narcotic pill in Modi's name; Summons to BJP executive

தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவருக்கு கிடுக்குப்பிடி  போட்டிருக்கிறது தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை.

தென் சென்னை பாஜகவின் மாவட்டத் தலைவராக இருக்கிறார் காளிதாஸ். இவர் மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் மருந்துக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மத்திய மோடி அரசின் மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனஉஷாதி கேந்திரா) எனும் மருந்துக் கடையைத் தனது மனைவியுடன் இணைந்து  நடத்தி வருகிறார் காளிதாஸ்.

பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் இந்த மருந்துக் கடை குறித்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பல புகார்கள் போயிருக்கிறது. இதனையடுத்து, இந்தப் புகாரின் மீது சென்னை மண்டலம்-lll இல் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் நடத்திய  விசாரணையில், அந்த மருந்துக் கடையில் காலாவதியான மருந்துகள் இருப்பதும், போதை மாத்திரைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Narcotic pill in Modi's name; Summons to BJP executive

இதன் தொடர்ச்சியாக, காளிதாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சென்னை சைதாப்பேட்டை மேஜிஸ்திரேட் கோர்ட்டில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆஜராக காளிதாசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கிய நிலையில், கமலாலயத்திற்கும் செய்தி பரவ, பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

எருமை முட்டி இழுத்து சென்ற பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Another tragedy for the woman dragged by the buffalo

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகிய நிலையில் அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற மதுமதி என்ற பெண்ணை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மதுமதியை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பெண்ணை மீட்க வந்தவர்களையும் எருமை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Another tragedy for the woman dragged by the buffalo

பாதிக்கப்பட்ட மதுமதியை உறவினர்கள் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு மதுமதியின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு 48 தையலுக்கு மேல் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மதுமதியின் கால் தொடைப் பகுதி அழுகிவிட்டதாக தற்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காலில் அழுகிய நிலையில் இருந்த சதையை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். அந்தப் பகுதியில் மற்றொரு காலில் உள்ள சதையை எடுத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர்.