திருவண்ணாமலை நகர மன்ற தலைவராக 2011 முதல் 2016 வரை இருந்தவர் அதிமுகவை சேர்ந்த பாலச்சந்தர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார்.
பாலச்சந்தர் நகரமன்ற தலைவராக இருந்தபோது, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் புதியதாக கடைகள் கட்டப்படவுள்ளது. அதில் இரண்டு கடைகள் ஒதுக்கி தருகிறேன் எனச்சொல்லி 2014ல் விஜயசங்கர் என்பவரிடம் 16 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னதுப்போல் கடைகள் கட்டித்தரவில்லை. 2016ல் பாலச்சந்தர் பதவிக்காலமும் முடிந்தது.
கடை தான் தரவில்லை, நான் தந்த பணத்தை திருப்பித்தா எனக்கேட்டு கணேசன் பாலச்சந்தர் வீட்டுக்கு நடையாக நடந்துள்ளார். ஒருக்கட்டத்தில் பணம் தர முடியாது உன்னால முடிஞ்சதை பார்த்துக்க எனச்சொன்னதாக தெரிகிறது. இதனால் கோபமான கணேசன் திருவண்ணாமலை காவல்துறை குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் இருதரப்பையும் அழைத்து விசாரித்தபோது, பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தந்துவிடுகிறேன் எனச்சொல்லி முதல் கட்டமாக 4 லட்ச ரூபாய்க்கு காசோலை தந்துள்ளார். அந்த காசோலையில் பணமில்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான கணேசன், இதுப்பற்றி குற்றப்பிரிவில் புகார் கூறியதின் அடிப்படையில் செப்டம்பர் 3 ந்தேதி அதிமுக பிரமுகர் பாலச்சந்தரை எஸ்.பி அலுவலகத்துக்கு விசாரணை என அழைத்து உட்கார வைத்துவிட்டனர்.
காலை முதல் எஸ்.பி அலுவலகத்திலேயே உள்ளார் அதிமுக முன்னால் மா.செ பாலச்சந்தர். ஆளும்கட்சி பிரமுகர் ஒருவரை விசாரணைக்காக அழைத்து உட்காரவைத்து, பணத்தை தர்றியா, ஜெயிலுக்கு போறியா என கேள்விகளால் மிரட்ட தற்போது வரை விசாரணை முடியவில்லை. இதனால் பாலச்சந்தர் குடும்பம் பதட்டமாகயிருக்க அதிமுக பிரமுகர்கள் யாரும் இதனை கண்டுக்கொள்ளவில்லை என்கின்றனர்.
பண மோசடி! – எஸ்.பி அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்ட ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்!
சார்ந்த செய்திகள்
Next Story
அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.