Skip to main content

பசுமை வழி சாலைக்கு எதிரான கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்  - மார்க்சிஸ்ட்  முழுஆதரவு

Published on 24/06/2018 | Edited on 24/06/2018
pasumai

 

மார்க்சிஸ்ட் தமிழ்மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிவிப்பு:
’’சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமைவழிச்சாலை என்ற பெயரில புதிதாக ஒருசாலையை அமைக்க மத்திய, மாநிலஅரசுகள் உத்தரவிட்டுள்ளது.இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படஇருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய்மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படஇருக்கிறது.

 

இச்சாலைக்காக விவசாயிகளுக்குசொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படஇருக்கிறது. விவசாயிகளுக்குசொந்தமான ஆயிரக்கணக்கானஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளிகிணறுகள், ஏரிகள், குளங்கள் எனநீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்படஇருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வனநிலங்கள் அழிக்கப்படுவதால்சுற்றுச்சூழல் கடுமையாகபாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள்உட்பட இடம் பெயர வேண்டிய நிலைஏற்படும். ஆயிரக்கணக்கானோர்தங்களின் குடியிருப்புகளை இழந்துவெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தான் பசுமை வழிச்சாலைதிட்டத்தை எதிர்த்து விவசாயிகளும்,பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆனால், அரசு போராடும் மக்கள் மீதுகாவல்துறையை ஏவி மிரட்டுவது,அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைதுசெய்து சிறையிலடைப்பது போன்றஅடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது. இத்தகையசட்டவிரோத அணுகுமுறைகளைஉடனடியாக நிறுத்த வேண்டுமெனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்துகிறது.

 

தமிழக அரசின் அடக்குமுறையைக்கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களைபாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தைகைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறுஅமைப்புகளின் சார்பில் 2018 ஜூன் 26ந்தேதி காஞ்சிபுரம், திருவண்ணாமலை,தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகியஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடிஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்றுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த கருப்புக்கொடி ஏற்றும்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.மக்களின் நலன் காக்க நடைபெறும்இப்போராட்டத்தைவெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளைமாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

’’

சார்ந்த செய்திகள்