FEFSI தொழிலாளர்கள் போராட்டம்
சென்னையில் FEFSI தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். FEFSI-யில் டெக்னீசியன்ஸ் யூனியனை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும். நடைமுறையில் இரண்டு வருடமாக வழங்கிவந்த சம்பளத்தையே திரும்ப தர வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஐந்து தினங்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் 25.09.2017 முதல் தொடர்ந்து உண்ணாவிரத்தை தொடருவோம் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சிவிசந்தர், சைதை சிவா, வேணுகோபால், ஜி.சிவா, குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
படங்கள்: அசோக்குமார்