Skip to main content

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

Image

 

பெரம்பலூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட பலவற்றை வலியுறித்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று (ஜூலை 31) காலை 11 மணிக்கு தலைமை நிர்வாகி திரு நூ.ஷே.முஹம்மது அஸ்லம் தலைமையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

 

கரும்பு பெருக்க அலுவலர் வேணுகோபால், துணைத் தலைமை ரசாயணர் மாதவன், துணைத் தலைமைப் பொறியளர் மணிவண்ணன், தொழிலாளர் நல அலுவலர் ஆர்.இராஜாமணி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் செந்துறை ஞானமூர்த்தி, ராஜாஜெயராமன், ஏ.கே. இராசேந்திரன், நம்மக்குணம் சீனிவாசன், வரதராஜன் , தேவேந்திரன், பி.சி.இராமசாமி, சீகூர் பெருமாள், துங்கபுரம் சக்திவேல் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை,

 

  • நடப்பு கரும்பு அரவையை 14-12-2020 இல் துவக்கலாம் என முடிவு செய்துள்ள ஆலை நிர்வாகத்தின் முடிவை மாற்றி நவம்பர் 15 ஆம் தேதிவாக்கில் துவங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

  • ஆலையையும், இணைமின் திட்டத்தையும் புணரமைக்கும் பணிக்கு தேவையான உதிரிபாகங்களை உடனே வால்சந்த் நகர் நிர்வாகம் உடனே வழங்க வேண்டும்.

 

  • ஆலையில் உள்ள கெஸ்டு ஹவுஸ்சில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு ஒரு அறை ஒதுக்க வேண்டும்.

 

  • இணைமின் திட்டத்திற்கு பங்குத் தொகை வழங்கியவர்களுக்கு உடனடியாக பங்குப் பத்திரம் வழங்க வேண்டும்.

 

  • 2015-2016, 2016-2017 ஆம் ஆண்டுக்கு மாநில அரசு அறிவித்த (SAP) கூடுதல் விலை டன்னுக்கு ரூ. 450 வீதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ. 33 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும்.

 

  • விவசாயிகளுக்கு விதைக்கரணை இலவசமாக வழங்க வேண்டும்.

 

  • நடப்பு பருவத்திற்கு வெட்டப்படும் கரும்புக்கு, தாமதம் இல்லாமல் வெட்டிய 15 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும்.

 

  • இணைமின் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்ட வகையில் வரவேண்டிய தொகை ரூ. 15 கோடியை உடனே பெற வேண்டும். மற்ற ஆலைகளில் இருந்து வரவேண்டிய பாக்கி தொகையை உடனே பெறவேண்டும்.

 

  • கரும்பு வெட்டுவதற்குமுன் சாலைகளைச் சரிசெய்தும், சாலையின் குறுக்கே தொங்கும் நிலையில் உள்ள மின் கம்பிகளை உயர்த்தி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

  • காலிப் பணியிடங்களுக்கு தற்க்காலிக பணியாளர்கள் நியமிக்கும் போது பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.

 

  • வெட்டாள்களை நியமிப்பதும், கூலியை வழங்குவதும் ஆலைநிர்வாகமே கண்காணித்து வழங்க வேண்டும்.

 

  • எரிந்த கரும்புகளை முன்னுரிமை அடிப்படையில் உடனே வெட்டி கழிவு இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.