Skip to main content

திருவாரூரில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
thiruvarur

 

திருவாரூர் அருகே கருகும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் வழங்கவேண்டும் என விவசாயிகள் பல  இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி 3.50 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தண்ணீர் இன்றி பயிர் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி முதற்கட்ட பணிகளிலில் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து பெரும் வேதனையடைந்துள்ளனர்.

 

 இந்நிலையில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட சம்பா சாகுபடியை  காப்பாற்ற உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  இது குறித்து பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடமும் பலர் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. என ஆத்திரமடைந்த விவசாயிகள் திருவாரூர் அருகே ஆண்டிபந்தல் கடைவீதியில் விவசாயிகள் மகிழ்ஞ்சேரி, ஆண்டிபந்தல், பனக்குடி, நாககுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கருகும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 விவசாயிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில்  கருகி வரும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள சம்பா பயிர்களை காப்பாற்ற புத்தாற்றில் முறைவைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

 

மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாலைக்குள் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.