Skip to main content

புகழ்பெற்ற குலசேரகப்பட்டினம் தசரா திருவிழா... கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

Famous Kulaserakapattinam Dasara Festival ... Start with flag hoisting!

 

மைசூரில் நடக்கும் ஸ்ரீ துர்கா பூஜை எனப்படுகிற தசரா திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. அதைப் போன்றே தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவும் தென் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. நவராத்திரி எனப்படுகிறது 9 நாட்களும் விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். கடைசி 10ம் நாள் கடற்கரையில் மகிஷா சூரசம்ஹாராம் வதம் நடைபெறும் சமயம் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரளுவது வழக்கம். குறிப்பாகத் தென் மாவட்டத்தில் மிக முக்கியமான விழாவாகக் கருதப்படுகிறது குலசையின் முத்தாரம்மன் தசரா திருவிழா.

 

இந்த தசரா விழாவின் சிறப்பு அம்சமே முத்தாரம்மனிடம் நேர்ச்சையாகப் பக்தர்கள் வேண்டிக் கொண்டு கடலில் நீராடி காப்புகட்டிக் கொண்டு பக்தர்கள் அம்மனுக்குப்பிடித்த அவதார வேஷமெடுப்பதே. இதற்காக தென் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் தசரா குழுக்கள் என்று நூற்றுக்கணக்கான குழுக்களாகச் செயல்படுவார்கள். கொடியேற்ற தினம் முதல் தசரா விழா நாள் வரை பக்தர்கள் காளி, துர்கை, மகாலட்சுமி, பத்ரகாளி, போலீஸ் அவதாரம் என்று தங்களின் நேர்ச்சைக்கேற்ப வேடமணிந்து தசரா தினத்தில் மேள தாளங்களுடன் குலசேகரப்பட்டினம் வருவர். 

 

அன்றைய தினம் முத்தாரம்மன் ஆலய நகரம் இரவு பகல் திருவிழாவாக அமர்க்களப்படும் . குலசேகரப் பட்டினம் கடற்கரையில் நீராடி தங்களின் விரதத்தை முடிப்பவர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்திவிட்டு அம்மனை தரிசிப்பார்கள். காலம் காலமாக புரட்டாசித் திங்களில் நடைபெற்ற குலசேகரப்பட்டினம் தசரா கடந்தாண்டு கரோனா தொற்று தடை காரணமாகப் பக்தர்களின் வருகைக்கும் ஆலயப்பிரவேசத்திற்கும் தடைவிதிக்கப்பட்டதால் தசரா பக்தர்களின் கூட்டமின்றி ஆலயத்தின் வளாகத்திலேயே அம்மனுக்கு கொடியேற்றி, பத்து நாட்களும் வழக்கம் போன்று பூஜைகள், அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றன.

 

Famous Kulaserakapattinam Dasara Festival ... Start with flag hoisting!

 

இந்த வருடம் கரோனா இரண்டாம் கட்டப் பரவலைத் தொடர்ந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆலயத்தில் பக்தர்களின் வழிபாடு மற்றும் கூட்டம் கூடுவதற்கு அரசு தடைவிதித்தது. தற்போதைய நவராத்திரி திருவிழா காரணமாக கடந்த 6ம் தேதியன்று முத்தாரம்மன் கோவில் தசராவை முன்னிட்டு குலசேகரப்பட்டினம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தடைகாரணமாகப் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை.

 

கொடியேற்ற தினமான 6ம் தேதி காலை 9.41 மணிக்கு ஆலயத்தில் கொடியேற்றம் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் மற்றும் கொடிப் பட்டத்திற்கு பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்பட்டன. பலவகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணியளவில் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் திருவீதி உலா நடந்தது. தடை ஒருபுறமிருந்தாலும் திருவிழா நாட்களில் 9 நாளும் காலை இரவு என தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் வழக்கம் போன்று நடைபெறும் கடைசி தினமான அக். 15ம் நாள் இரவு 12 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மகிஷா சூரசம்ஹார வதம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. 11ம் நாள் அம்மன் கலையரங்கத்திற்கு எழுந்தருளுதலும் 12ம் திருநாளன்று நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் முத்தாரம்மனின் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

 

விழா நாட்களில் ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பூ, மாலை, தேங்காய், பழம் கொண்டு வர அனுமதி இல்லை. முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தசரா நிகழ்ச்சிகள் யூ டியூப் சேனல் இணையதளம் மூலம் ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டும் கரோனா பரவல் தடை காரணமாக திரண்ட பக்தர்கள் உடன்குடிச்சாலையிலுள்ள ஒரு கோவிலில் மாலை அணிந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.