Skip to main content

தனிநபர் சொத்து இல்லாத ஊர்க்கட்டுப்பாடு கொண்ட விசித்திர கிராமம்!

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
oor

 

இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும்  ஈ.சி.ஆர் சாலை உள்ள நரிப்பையூர் அருகே உள்ள மூக்கையூர் கடற்கரை செல்லும் வழியில்,சுமார் ஒன்றரை கிலோ மீட்டரில் உள்ளது மாணிக்கம் நகர். இங்கு கிராம கட்டுப்பாட்டுடன் இலவச இடம் தருகிறார்கள்.

 

இதுபற்றி ஊர் தலைவர் தவசியிடம் கேட்ட போது,  ‘’பல நூறு வருடங்கள் வரை நரிப்பையூரில் பூர்வகுடிகளாக இருந்த சாம்பவர்களாகிய ஆதிதிராவிடர்கள் நாங்கள். சுமார் 30 வருடங்களுக்கு முன் நரிப்பையூர் ஏரியாவில் நடந்த கலவரம். மற்றும் கால மாற்றத்தால் தனக்குரிய விவசாய விளை நிலங்கள், தொழில்கள், குடியிருப்புகளை இழந்த எங்க மக்கள் , எங்கள் குலதெய்வம் குடியிருக்கும் மாடசாமி, முனியசாமிக்கு பாத்தியப்பட்ட சுமார் 10 ஏக்கர் இடத்தில் குடியிருக்க வரும் போது பல்வேறு இடையூறுகள் .

 

ஆதிக்க சக்திகளிடம் இருந்த பூர்வீக இடத்தை அது சமயம் மீட்டுக் கொடுத்தவர் சாத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் (வக்கீல்) என்பவர். அந்த நன்றிக்கடனுக்காகவே மாணிக்கம் நகர் என்று இன்று வரை அடையாளம் கூறப்படும் ஊரில் ....

 

மாணிக்கம் நகரில் ஊரின் பொதுச் சொத்தாக சுமார் 20 ஏக்கர் உள்ளது. ஊர் தலைவர் டிரஸ்ட் நிர்வாகியாவார்.

யாதொரு நபர் பெயரிலும் தனிப்பட்ட அசையா சொத்து கிடையாது.

தலா ஒரு குடும்பத்தினருக்கு 3 சென்ட் (1200 ச.அடி) இடம் தானமாக தரப்படும், அதில் அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் வீடு கட்டிக் கொள்ளலாம். (தற் சமயம் 200 குடிகள் உள்ளன).

 

ஆண்டாண்டு காலம் குடியிருக்கலாம், தனிப்பட்ட வாடகை ஏதும் கிடையாது. ஊர் வரி. கோயில் வரி மட்டும் செலுத்த வேண்டும்.

சொத்தை அடமானம் வைக்கவோ, கிரயம் செய்யவோ குடியிருப்பவருக்கு உரிமையில்லை.. எந்த வீட்டு உரிமையாளருக்கும் அவர் வசிக்கும் வீட்டின் பட்டா கிடையாது.

அரசு நலத்திட்ட உதவி பெற ஊர்த்தலைவர் குடியிருப்பு சான்று தருவார் அதை வைத்து மின்சாரம் .ரேசன் கார்டு. ஆதார் அனைத்தும் பெற்று கொள்ள முடியும்..

மக்கள் தொகை பெருக்கத்திற்கு தகுந்தாற்போல் ஊரை ஒட்டி உள்ள இடங்களை ஊர்ப் பொதுச் சொத்தாக வாங்கி வைத்துக் கொண்டே வருகிறார்கள். வெளியில் இருந்து வந்து ஊர்க் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இடம் தருவோம் என்கிறார்கள்.

 

நிரந்தரமாக ஊரை விட்டு வெளியூர் சென்று செட்டில் ஆக முடிவெடுத்தால் இடத்தை ஊருக்கு திரும்ப ஒப்படைப்பு செய்ய வேண்டும்.

முக்கியமாக ஊர் மக்கள் பிடித்த அரசியல் கட்சியில் இருந்து கொள்ளலாம். ஆனால் ஊருக்குள் கட்சிக் கொடி ஊண்டவோ ,அரசியல் கூட்டம் நடத்தவோ கூடாது..

 

வெளி நபர்கள் .கம்பெனி நடத்த வேண்டுமளவு இடம் கொடுத்தும் உதவுகிறார்கள். உதாரனமாக ஒரு வெளி நபர் தும்புமில் வைக்க வேண்டுமளவு இடவசதி கொடுத்துள்ளார்கள். மாத வாடகை வாங்குவதில்லை. அவரிடமும் வருடம் ஒரு முறை ஊர் வரி. கோயில் வரி மட்டுமே ....

இது போல் நிறைய விசயங்கள் கிராமங்களில் நடந்து வருகிறது..

இது போன்ற கிராமங்களை சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்து இன்னும் சற்று உதவி செய்தால் சமூக பொருளாதார மாற்றம் ஏற்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயரும்’’ என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கிராம சபைக் கூட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை

Published on 30/09/2023 | Edited on 01/10/2023

 

Village council meeting C M M.K.Stal's speech

 

தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி (02.10.2023) அன்று 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மக்களதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபைக் கூட்டங்கள் என்பதை 6 ஆக உயர்த்தி அரசாணையிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் நாளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராம சபைக் கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

 

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்கவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணப்படி அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாகக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக எல்லார்க்கும் எல்லாம் என்கிற மையக் கருத்தின்படி நடத்தப்படவுள்ளது.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

இவ்வழைப்பிதழ் கிராம சபைக் கூட்டத்திற்கான கருப்பொருளான எல்லார்க்கும் எல்லாம் எனும் மையக் கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

 

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம், மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாகத் திட்டச் செயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

 

கிராமசபைக் கூட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் 02.10.2023 அன்று துவக்கி, கிராமசபை குறித்த கருத்துக்களைத் தெரிவித்திட உள்ளார். மேலும், அமைச்சர்கள் தொடர்புடைய மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கிராமசபைக் கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாகக் கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

இதில், பொதுவான விவாதப் பொருட்களாக, ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.