Skip to main content

'பன்னீர்' மாலை போட்ட நிர்வாகி; மேடையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Executives who tensed Edappadi Palanisamy in the general assembly!

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இன்று (23/06/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை உற்சாகத்தைக் கொடுத்த போதும், தமக்கு மாலை அணிவிக்க வந்தவர்களை அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடித்துக் கொண்டார். 

 

காவல்துறையினர் மற்றும் தனியார் காவலர்கள் புடைச்சூழ கூட்ட மேடைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். ஒற்றைத் தலைமைக் கோரிக்கை வலுத்த சூழலில் அவைத் தலைவர் நியமனத்தை வழிமொழியும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி பேசிய போது, முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பென்ஜமின் அவருக்கு பன்னீர் ரோஸ் மாலை அணிவிக்க முயன்றார். அப்போது, கடித்துக் கொண்ட அவர், மாலை அணிவிக்க வேண்டாம் என்றும், பூங்கொத்தை வழங்க வேண்டாம் என்றும் தவிர்த்தார். 

 

அதன் பிறகும் கூட்டம்நிறைவடையும் தருவாயில், நிர்வாகிகள் மாலை அணிவிக்கும் போது, வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பின்னர், பொதுக்குழு சார்பில் கிரீடம் அணிவிக்கப்பட்டு வால் வழங்கியதை அவர் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகே, நிர்வாகிகளிடம் பூங்கொத்தைப் பெற்றார். 

 

சார்ந்த செய்திகள்