Skip to main content

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி! ஒரே நாளில் இறந்ததால் உறவினர்கள் சோகம்!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

 

உடல்நிலை பாதிக்கப்பட்டு மனைவி இறந்த சிறிது நேரத்தில் அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 erode anthiyur



ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஆலயங்கரடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 83). இவருடைய மனைவி காமாட்சி அம்மாள் (78). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகனுக்கும், மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் யாருக்கும் சுமையாக இருக்கக்கூடாது என பழனியப்பனும், காமாட்சி அம்மாளும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக இவர்கள் 2 பேரும் வயது மூப்புக்காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவ்வப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 
 

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமாட்சி அம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். மனைவி காமாட்சி இறந்தது பற்றிய தகவல் அறிந்ததும் அவருடைய கணவர் பழனியப்பன் கதறி அழுததோடு, மிகுந்த மனவேதனையில் இருந்தார். பின்னர் அவரும் சிறிது நேரத்தில் திடீரென இறந்துவிட்டார். 


கணவனும், மனைவியும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பழனியப்பன் மற்றும் காமாட்சி அம்மாளின் உடல்களை பார்த்து அவர்களுடைய மகன், மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.


 

சார்ந்த செய்திகள்