Skip to main content

சட்டமன்றத்தை பெருக்குவதற்கு B.E, MBA படித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்: ஈஸ்வரன் 

Published on 07/02/2019 | Edited on 07/02/2019
unemployment



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழக சட்டமன்றத்தை பெருக்கி சுத்தம் செய்கின்ற பணிக்கு 14 பேர் தேவை என்றும், இப்பணிக்கு 8-ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் அரசு விளம்பரம் செய்திருந்தது. 14 காலியிடங்களுக்கு 15000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிகிறது. 
 

விண்ணப்பங்களை பிரித்து சரிபார்த்த போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் கல்வித்தகுதி பகுதியில் B.E, MBA, M.Com, M.Sc  என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 
 

பொறியியல் படித்தவர்கள் பல வர்த்தக கட்டிடங்களில் லிப்ட் இயக்குபவர்களாக வேலை பார்த்து வருவது முன்பே தெரிந்ததுதான். ஆனால் துப்புரவு பணிக்கு இவ்வளவு கல்வி தகுதியுடன் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றால் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. 
 

சட்டமன்றத்திற்கு உள்ளே அமர்ந்து சட்டம் இயற்றுகிறோம் என்று மேஜை தட்டுகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பல பேருடைய கல்வித்தகுதி என்னவென்று தமிழகம் அறிந்தது. மெத்த படித்தவர்கள் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்திருப்பதை வேதனையோடு மட்டும் பார்க்க கூடாது. அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற செயல். 
 

தமிழகத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் பெருகுவது போல தொழிற்சாலைகள் பெருகவில்லை. படிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்று கல்வியை பற்றி மட்டுமே கவலைப்பட்டு வந்த தமிழகத்திற்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்க வேண்டுமென்ற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. இதைதான் கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றோம். 
 

லட்சக்கணக்கான கோடிகள் முதலீடு வந்திருக்கிறது என்று திரும்பத்திரும்ப சொன்னாலும் படித்தவர்களுக்கு வேலை கொடுக்கின்ற வகையில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவில்லை, இயங்கி கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஒரு அமைச்சர் உயர் அதிகாரிகள் கீழ் ஒரு துறையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 
 

இந்த கருத்துகளை யாரையோ குறை சொல்லவோ, சுட்டிக்காட்டவோ நான் சொல்லவில்லை. எதார்த்தமான ஒரு சூழ்நிலையை இந்த நிகழ்வை விட வேறொன்றின் மூலம் உதாரணமாய் காட்ட முடியாது. மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள் என்று வேலையில்லா பட்டதாரிகளின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களை உயிராக நினைக்கிறது தி.மு.க அரசு” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin pridely says the DMK government considers the farmers alive

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று (20-02-24) காலை 11 மணிக்கு 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  தாக்கல் செய்து பேசினார்.

இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ‘மண்ணும் செழித்தது! மக்களும் செழித்தார்கள்! இதனைக் கண்முன்னால் கண்டு வருகிறோம். இந்த வரிசையில் நான்காவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இரண்டு மணிநேரம் அவரால் வாசிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையானது இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது. வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டுமோ அல்லது, அதனைத் தொழிலாக மட்டுமோ கருதுபவர்கள் அல்ல நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மையாகும். அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல நிலத்துக்கும். மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த நம் முன்னோர் வழியில் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு அழுத்தமான சாட்சியமாக 2024 -25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மண் வளம் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளையும் ஊக்கப்படுத்திட 'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' அமைந்துள்ளது. இராசயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து வருகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. இரசாயன உரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெற்பயிரில் இரசாயன மருந்துகளைக் குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது 2400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உயர்த்தப் போகிறது.

Tamil Nadu Chief Minister M. K. Stalin pridely says the DMK government considers the farmers alive

மரபுசார் நெல் இரகங்களை ஊக்குவிக்கப் போகிறோம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகம் அதிகம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்கும் மையங்களை உருவாக்க இருக்கிறோம். இயற்கைச் சீற்றங்களால் உழவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்களை மீட்கப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்கு மட்டும் 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'ஒரு கிராமம் ஒரு பயிர்' என்ற திட்டம் 15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

பத்து ஆண்டுகளாகப் பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை கழக அரசு வழங்கி உள்ளது. இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம். நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தொழில் துறை சார்பில் நடைபெறுவதைப் போல வேளாண்மைத் துறை சார்பில் கண்காட்சி. திருவிழா. சங்கமம் போன்றவற்றை நடத்தி வேளாண்மை மீதான ஆர்வத்தைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 'உழவர்கள்' மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில் துறையைப் போல அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மலர்க் கண்காட்சியானது சென்னையில் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அதனைப் பார்த்து வருகிறார்கள். இவை போன்ற முயற்சிகள், வேளாண்மையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செலுத்தும்.

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப்போராடினார்கள் உழவர்கள். அவர்களது எதிர்ப்பினால் பின்வாங்கியது பா.ஜ.க. அரசு. இப்போது மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.  அவர்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது. உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது. அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம்’ என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“வார்த்தை ஜால வேளாண் பட்ஜெட்” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Edappadi Palaniswami Review by Agriculture Budget

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று (20-02-24) காலை 11 மணிக்கு 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  தாக்கல் செய்து பேசினார். இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ‘இந்த தி.மு.க. அரசு நான்காவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எதிர்பார்த்த பயன் இல்லை. 2024-2025ஆம் ஆண்டு பட்ஜெட்டை வார்த்தை ஜாலங்களால் நிரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஏமாற்றும் முயற்சியாக இருந்ததே தவிர, எந்த நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ இந்த நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை.

அ.தி.மு.க அரசு அதிக கடன் வாங்கி, வருவாய் செலவினங்கள் மேற்கொள்வதாக குறை கூறிய திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வருவாய்ப் பற்றாக்குறையை அறவே நீக்கிவிடுவோம் என்று வாய்ஜாலம் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசு உறுதி அளித்தபடி நிதிநிலையை மேம்படுத்தியதா? என்றால் இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உரையின் மீது பதில் அளிக்கும்போது, தனது அரசின் சாதனைகளாக 10 சாதனைகளைக் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் தமிழ் நாட்டின் சாதனையாகச் சொல்லலாமே தவிர, திமுக அரசின் திராவிட மாடல் சாதனை என்று சொல்ல முடியாது. பிறருடைய சாதனைகளை, குறிப்பாக அ.தி.மு.க அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வதும், நாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்தி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும், விடியா திமுக அரசுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.