Skip to main content

தந்தை வைத்த மின்வேலியில் சிக்கி மகனும், தோழியும் உயிரிழப்பு! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

electric fence set by the father two person incident police investigation

 

கிருஷ்ணகிரி அருகே, தந்தை வைத்த மின்வேலியில் சிக்கி மகனும், அவருடைய தோழியும் பலியாகினர்.

 

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுபேதார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). இவருடைய மகன் தசரதன் (வயது 26). இருவரும் விவசாயிகள். தசரதனுக்கு  திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

 

இதே ஊரைச் சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவரை சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துர்க்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சத்யா, கணவரை பிரிந்து தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். ஆரம்பத்தில் தசரதனும், சத்யாவும் நட்பாக பழக தொடங்கினர். இதுவே அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.  

 

இந்நிலையில் ஜூலை 29- ஆம் தேதி, சத்யா தன்னுடைய அண்ணன் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வருவதாகக் கூறி, தனது குழந்தையுடன் சுபேதார்மேடு பகுதிக்கு வந்துள்ளார். 

 

அங்கு தசரதனை சந்தித்துள்ளார். எம்.சி.பள்ளி அருகில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்ற தசரதன், அங்குள்ள இரும்பு கொட்டகையில் சத்யாவுடன் இரவில் தனிமையில் இருந்துள்ளார். சத்யா, தனது குழந்தையை அந்த கொட்டகையில் தொட்டில் கட்டி தூங்க வைத்துள்ளார். 

 

இதற்கிடையே, ஜூலை 30- ஆம் தேதி காலை அந்த வழியாக சிலர் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றபோது அந்த கொட்டகையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு திடுக்கிட்டனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது, தசரதன் மற்றும் தோழி சத்யா ஆகியோர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை தொட்டிலில் அழுது கொண்டிருந்தது. 

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மகாராஜாகடை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி மற்றும் மகாராஜாகடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இருவரின் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. 

 

இரும்பு கொட்டகையில் இரவு நேரத்தில் வரும் சில மர்ம நபர்கள், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதை தடுப்பதற்காக, இரும்பு கொட்டகையைச் சுற்றிலும் தாமோதரன் மின்வேலியை அமைத்துள்ளார். 

 

இதையறியாத தசரதன் சத்யாவுடன் அங்கு சென்றுள்ளார். குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களின் கைகள், மின் வேலியில் மோதியதால், மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்துள்ளனர். 

 

இதையடுத்து தசரதனின் தந்தை தாமோதரனை காவல்துறையினர் கைது செய்தனர். தந்தை வைத்த மின்வேலியில் மகனும், தோழியும் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.