Skip to main content

போதையிலிருந்து மீண்டுவர அறிவுரை கொடுத்த நண்பனை போதை ஊசி போட்டு கொல்ல முயன்றவர்கள்!!!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018

திருச்சியில் கஞ்சா, போதை, சரக்கு என தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தலைவிரித்து ஆடுவதால் திருச்சியில் அடிதடி, கொலை, திருட்டு என நாளுக்கு நாள் அதிகாரித்துக்கொண்டே வருகிறது. எளிதில் கிடைத்துவிடும் போதையில் இளைஞர்கள் வெகுவாக போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதை விட கொடுமை இவர்களை போதையில் இருந்து தப்பித்து இயல்பு வாழ்க்கைக்கு வாழ சொன்ன நண்பனுக்கே தூங்கும் போது போதையில் போதை ஊசி போட்டதால் கைகள் அழுகும் நிலைக்சென்ற கொடுமை திருச்சியில் நடந்திருக்கிறது. 

 

drug


 

திருச்சி சத்திரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சியில் கூர்க்கா வேலை செய்து கொண்டுயிருக்கிறார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால், அக்கா வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் சின்னமார்க்கெட் கடை மாடி மற்றும் அன்னதான சத்திரத்தில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது உறவினர் குமார் என்பவரும் தங்கியுள்ளார். இந்நிலையில் குமாரின் நண்பர்கள் அருண், தர்மா ஆகிய இருவரும் மாடி அறையில் தங்கியிருந்தனர். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடைய இருவரும், போதை ஊசியும் அடிக்கடி உடலில் செலுத்தி வந்தனர். 

 

 

 

இவர்களோடு கூட இருந்த அஜித்குமார் கண்டித்து, அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், தர்மா இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரின் இடது கையில் போதை ஊசியை செலுத்தி உள்ளனர். 

 

இதனால் அஜித்குமார் வலியால் துடித்து நிலையில் ஒரு நாட்களில் ஊசி செலுத்தப்பட்ட பகுதி மரத்து கருத்து போனதால் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். போதையில் ஊசி போட்டதால் நரம்புகளில் ஊசி போடுவதற்கு பதிலாக தசைப்பகுதியில் ஊசி போட்டதால் மருத்து சதை பகுதியில் இறங்கி அவருடை கை கருப்பு அடைய ஆரம்பித்துள்ளது. 

 

 

 

இதையடுத்து, திருச்சி அடுத்த ஒரு எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அஜித்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். 

 

மேலும் போதை மாத்திரை எங்கு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்சியில் உள்ள மெடிக்கல்களில் முக்கியமான காந்திமார்க்கெட், மத்திய பேருந்து நிலையம், புத்தூர், அரசு மருத்துவனை பகுதியில் தடைசெய்யப்பட்ட மருந்துகள், மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கொடுப்பதால் இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு மெடிக்கல் கடைகளில் ஈசியாக கிடைப்பதால் அவர் போதையின் அடிமையாகவே வாழ்கிறார்கள். 

 

 

 

அஜித் நண்பர்கள் அருண், தர்மா, போதை மாத்திரை விற்றதாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மெடிக்கல் கடை யில் தொடர்ந்து வாங்கியிருப்பது விசாரணையில் தெரிந்ததால் ஊழியர் வெள்ளையன் (எ) சுரேஷ் பாபு, உரிமையாளர் வசந்தா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

 

அறிவுரை செய்த நண்பக்கு நண்பர்களே போதை ஊசி போட்ட கொடுமை திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.