சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா. இவருக்கு வயது 38. இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாந்தா, சவுகார்பேட்டையில் உள்ள மிளகாய் மண்டியில் வேலை செய்து வந்தார். அதே மிளகாய் மண்டியில் எம்.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு வயது 25.
பணிபுரியும் இடத்தில் இருப்பதால் சாந்தாவுக்கும், உதயகுமாருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேருக்குமான நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாந்தாவின் வீட்டிற்கு உதயகுமார் வந்துள்ளார். அப்போது, இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சாந்தாவின் கணவர், மனைவியைக் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (15.04.2021) மாலை உதயகுமார், சாந்தா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சாந்தா, ‘இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம்’ என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உதயகுமார், சாந்தாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வீட்டிலிருந்த காய் வெட்டும் கத்தியை எடுத்து, சாந்தாவை சரமாரியாக குத்திவிட்டுத் தப்பினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.