Skip to main content

"விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா?"- உதயநிதி ஸ்டாலின் கேள்வி...

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

 

dmk udhaya nidhi stalin speech at cuddalore

 

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சார பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். 

 

அதன் ஒரு பகுதியாக கடலூர் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதியில் தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை பார்வையிட்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மீண்டும் மருத்துவக் கல்லூரி வருமா முடக்கப்பட்ட திட்டம் முழுமை பெறுமா?" என கேள்வி எழுப்பியவர், "கண்டிப்பாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் மருத்துவக் கல்லூரி திட்டம் கடலூரில் முழுமை பெறும் வகையில் முடிக்கப்படும்" என்றார்.

 

அதைத் தொடர்ந்து ராமாபுரத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி, "மூன்று வேளாண் மசோதா கொண்டு வந்த பா.ஜ.க. அரசு போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளது. விமான நிலையங்கள் தனியார்மயம், ரயில்வே தனியார்மயம் போன்று விவசாயத்தையும் புதிய வேளாண் சட்டங்களால் தனியார்மயக் கொள்கையாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மைத் துறை கார்ப்பரேட்டுகள் கையில் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. முதலில், இதற்கு எதிராகப் பேசிய அ.தி.மு.க. தற்போது ஆதரவளிக்கிறது. டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மேல் போராடி வரும் நிலையில் புதிய வேளாண்மை சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறும் முதல்வர் பழனிசாமி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

இந்த நிகழ்ச்சிகளின்போது கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து இன்றும், நாளையும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது