பஞ்சாயத்து செயலாளர் தனது தற்கொலைக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள ராமநாயினிகுப்பம் கிராமத்தின் ஊராட்சி செயலாளராக ராஜசேகர் செயல்பட்டு வந்த நிலையில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதான் காரணம் என மூன்று பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றது தெரியவந்தது. ஊராட்சிக்கு வரும் நிதியை தனக்கு தர வேண்டும் என ராஜசேகரை கவுன்சிலர் ஹரி வற்புறுத்தி வந்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.