Skip to main content

திண்டுக்கல் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கியது எப்படி! புதுமுக வேட்பாளரை இறக்கும் ஐ.பி!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் வேடசந்தூர் நீங்கலாக திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் கொண்டதுதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி.
 
 
இத்தொகுதியில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஐ.பெரியசாமியும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினராக சக்கரபாணியும், பழனி சட்டமன்ற உறுப்பினராக செந்தில்குமாரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினராக ஆண்டி அம்பலம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கைப்பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை திமுக கோட்டையாக உருவாக்கி உள்ளனர்.
 
dmk

 

 
இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் திண்டுக்கல் தொகுதியை கேட்டு காங்கிரஸ் போராடி வந்தனர் அதிலேயும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், குஷ்பு போன்ற முக்கிய தலைவர்கள் போட்டிபோட உள்ளனர் என்றும் பேச்சு பரவலாக எதிரொலித்து வந்தது. ஆனால் கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது திண்டுக்கல் மாவட்டத்தையே திமுக கோட்டையாக உருவாக்கி நான்கு சட்டமன்ற தொகுதிகளை தக்கவைத்து  வைத்திருக்கிறோம்  அப்படி இருக்கும்போது இத்தொகுதியை  திமுகவுக்குத்தான் ஒதுக்க  வேண்டுமென தலைவர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
 
dmk

 

 
 
அதன் அடிப்படையில்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணியின்  இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் திமுக தலைவர் ஸ்டாலினும் திண்டுக்கல் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது திமுக தான் போட்டி போடும் என வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டு ஐ.பெரியசாமி, சக்கரபாணி, செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் மாவட்ட பொறுப்பில் உள்ள சில  உபிகளும் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். இப்படி தலைவரிடமும், காங்கிரசுடனும் போராடி திண்டுக்கல் தொகுதியை திமுகவுக்கு கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி வாங்கி இருக்கிறார்.
 
       dmk

 

 
 
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 1952-ல் பாராளுமன்ற தொகுதி உருவான காலத்திலிருந்து 2019 வரை 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 1967-ல் திமுக பாராளுமன்ற உறுப்பினராக அன்புச்செழியன் வெற்றி பெற்றிருக்கிறார் அதைதொடர்ந்து 1971-ல் ராஜாங்கமும் 1980-ல் மாயத்தேவர் என மூன்று முறை இத் தொகுதியை திமுக தக்கவைத்துள்ளது.
 
 
அதுபோல் காங்கிரசும் இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளுடன் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி திமுக காங்கிரஸ் கூட்டணி இத்தொகுதியில் எட்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு திமுகவின் செல்வாக்கை வைத்து காங்கிரசும் இத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் திமுக இத்தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்தான் காந்திராஜன் தோல்வியைத் தழுவினார். அதனாலதான் இந்த பாராளுமன்ற தேர்தலில் அவசியம் திமுக வெற்றி பெறும் என ஐ.பி. உள்பட மாவட்ட பொறுப்பாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் தொகுதி திமுகவுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி திமுக கோட்டையாக உள்ள திண்டுக்கல் தொகுதியில் உடன்பிறப்புகள் போட்டி போடுவதற்காக முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், சாணார்பட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயன், பழனி முன்னாள் சேர்மன் வேலுமணி உள்பட 20க்கும் மேற்பட்ட உ.பி.கள் சீட் கேட்டு விருப்பமனு தாக்கல் செய்து அதன் அடிப்படையில் நேர்காணலுக்கும் சென்றுவிட்டு வந்து இருக்கிறார்கள்.
 
dmk

 

இப்படி தலைவர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட உடன்பிறப்புகள் அனைவருமே ஐபி ஆதரவாளர்கள் என்பதால்  சீட்டு வாங்குவதற்கும் போட்டி போட்டு வருகிறார்கள். இருந்தாலும் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலை வாக்காள மக்களின் மனநிலையை பொறுத்து யாரை? நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என ஐ.பெரியசாமி தொடர்ந்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூலம் விருப்பமான  கட்டிய கட்சி பொறுப்பாளர்களில்  மேற்கு அல்லது கிழக்கு பகுதியில் உள்ள ஒரு உடன் பிறப்புக்கு  சீட்டுகொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும்  புதுமுகமான உடன் பிறப்பு அப்படிபட்ட புதுமுகம் வேட்பாளரைதான் ஐ.பி.தேர்தல் களத்தில் இறக்க தயாராகி வருகிறார் என்ற பேச்சும் பரவலாக எதிர்ஒலித்து வருகிறது. அதன் மூலம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை திமுக கோட்டையாக உருவாக்க திமுக உடன்பிறப்புக்களும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.