Skip to main content

காவல் தெய்வத்திற்கு அடிக்கல் நாட்டிய வனத்துறைஅமைச்சர் சீனிவாசன்!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019
ss

 

திண்டுக்கல் கோட்டைமாரியம்மன்  திருக்கோவில் மற்றும் அபிராமி அம்மன் திருகோயிலுக்கு அடுத்தபடியாக செல்லாண்டியம்மன்   திருக்கோவில் பிரசித்த பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இக்கோயில் மாநகரின் மையப்பகுதியில் காவல் தெய்வமாக இருந்து வரும் செல்லாண்டியம்மன் திருக் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் திண்ணையில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த செல்லாயிக்கு  கூரைக் கொட்டகை அமைத்து செல்லாண்டியம்மன் தெருவில் வசிக்கக்கூடிய மக்களும், நகர மக்களும், பல ஆண்டுகளாக  வணங்கிவந்தனர். அதன்பின் கடந்த 1991ஆம் ஆண்டு இக்கோயிலை புதிப்பித்து முதன் முதலில் கட்டிடத்தோடு ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் பரம்பரை அறங்காவலர்கள் மூலம் நடத்தப்பட்டது.  

 

sr

 

இந்த கும்பாபிஷேகத்துக்கு நக்கீரன் ஆசிரியர் மதிப்பிற்குரிய நக்கீரன் கோபால் அண்ணன்   கலந்து கொண்டு நன் கொடையும் வழங்கினார்.     அதன் பின் 12 வருடங்களுக்கு பிறகு கடந்த 2003ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடந்தது.  அதன் பின் தற்போது 16 வருடங்களுக்கு பிறகு  இந்த செல்லாண்டி அம்மன் திருக் கோவிலை கற்கோவிலுடன் ராஜகோபுரம் கட்ட திருப்பனி செய்ய  வேண்டும் என பரம்பரை அறங் காவலர்கள் மற்றும்  பொதுமக்களும் நகர முக்கிய பிரமுகர்களும் முடிவெடுத்ததன் பேரில்  கற்கோவில் கட்டுவதற்க்கான திருப்பனி செய்ய "சித்ரவான ஸ்தாபன" நிகழ்வு நடைபெற்றது.


      இந்த விழாவிற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தொழில்அதிபரும் ஜி.டி.என்.கலைக்கல்லூரி இயக்குனருமான ரெத்தினம், முன்னாள் மேயர் மருதராஜ்  ஆகியோர் செல்லாண்டி அம்மனை  வழிபட்டு யாக மூலம் வைக்கப்பட்டிருந்த புனித தண்ணீரை ஊற்றி பூபுஸ்பம் போட்டு கோவிலின் திருப்பணிக்கான மூலஸ்தானத்தில் கற்களை வைத்து திருப்பணிக்கான பணிகளை துவக்கி வைத்தனர்.  

 

s


    இந்த விழாவிற்கு அபிராமி அம்மன் கோவில் உதவி ஆணையர் சிவலிங்கம்,  செயல் அலுவலர் மகேஸ்வரி, கோவில் பூசாரி குரு மற்றும் சீனிவாசா புளூமெட்டல்ஸ் உரிமையாளர்களும் அமைச்சர் சீனிவாசனின் மகன்களான ராஜ்மோகன், வெங்கடேஷ், அர்பன்பேங் தலைவர் பிரேம் மற்றும் திருப்பணிக்குழு தலைவர் கருணாகரன், செயலாளர் சந்திரசேகரன் பிள்ளை, பரம்பரை பூசாரியும் பொருளாளருமான மாரிமுத்து மற்றும் தேனி ஆனந்தம் நடராஜன்,  சுரபி கல்வி  நிறுவனர் ஜோதிமுருகன், பி.எம்.எஸ் முருகேசன்,  ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன் மற்றும் திருப்பணிக்குழு பொறுப்பாளர்களான பத்திரம் எழுத்தாளர் களான செந்தில், செல்வா என்ற  செல்வி மற்றும் கண்ணன்., ஆறுமுகம், செந்தில்,  மாணிக்கம், அங்குராஜ், ராமமூர்த்தி‌, வேல்குமார்,  காளிதாஸ்,  கிருஷ்ணன் அழகர்சாமி, முருகன் உள்பட திருப்பணி குழு பொருப்பாளர்களுடன் பொது மக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.