Skip to main content

தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் மார்க்கண்டேயன்..?

Published on 23/12/2018 | Edited on 23/12/2018

சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் என்று மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் தலையிட்டு, மார்க்கண்டேயனுக்கு செய்தி தொடர்பாளர் பதவியையும் பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு, எங்களுக்குள் எந்த சர்ச்சையும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தினர்.

.  

admk

 

இந்நிலையில், இன்று விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட புதூரில் அதிமுக கூட்டத்தில் மார்க்கண்டேயன் ஆதரவாளர்களும், கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, தினகரன் அணிக்காக வேலை பார்க்கிறாரா மார்க்கண்டேயன்? என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

admk

 

இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், "அண்மையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு வந்தபோது, விளாத்திகுளத்தில் மாஜிக்கள் மார்க்கண்டேயன், சின்னப்பன் இதில் யாருக்கு சீட்டு கொடுத்தால் வெற்றி வாய்ப்பு என்று கேட்டார். இதில் 10-ல் 8 பேர் மார்க்கண்டேயனுக்கே வாய்ப்பு என்று தெரிவித்தோம். இதனால் எல்லோரும் சேர்ந்து கட்சிப் பணியாற்றுங்கள் என்று சொன்னார். ஆனால் மொத்தத்தையும் மார்க்கண்டேயன் கெடுத்துவிட்டார்' என்றனர்.

 

 

ஏன் இந்த மோதல் அடிதடி என்று முக்கிய நிர்வாகி நம்மிடம் விவரித்தார், "அதாவது விளாத்திகுளம் தொகுதிக்கு போடப்பட்ட பொறுப்பாளர்கள் சிலரை மாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் சி.த.செல்லபாண்டியனிடம், மார்க்கண்டேயன் கோரிக்கை வைத்தார். அதை மா.செ. ஏற்கவில்லை. இதனால், வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காகவே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மார்க்கண்டேயன், இன்றைய கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

 

 

கூட்டம் ஆரம்பித்த உடனே மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் புதூர் முன்னாள் சேர்மன் தனஞ்செயனின் வேட்டியை உருவ முயன்றனர். இதனால் கூட்டத்தில் ரசாபாசம் உருவானது. ஒட்டப்பிடாரம் முன்னாள் சேர்மன் காந்தி காமாட்சி, விளாத்திகுளத்தை சேர்ந்த குரங்கு முருகன் உள்ளிட்டோர் கடும் ரகளையில் ஈடுபட்டபோது, அதை மார்க்கண்டேயன் வேடிக்கை பார்த்தாரே தவிர, அவர்களை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் கடம்பூர் ராஜூ கீழே இறங்கி வந்து சமாதானப்படுத்தினார். இதனால் மார்க்கண்டேயன் தான் தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல்லா இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது "என்றார்.

 

admk

 

விளாத்திகுளத்தை பொறுத்தவரை அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மார்க்கண்டேயனுக்கு தான் சீட் என்றும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அதை உதாசீனப்படுத்தும் வகையிலே, இன்று மார்க்கண்டேயன் நடந்திருக்கிறார். கூட்டத்தில் மார்க்கண்டேயனை, செல்லப்பாண்டியன் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்க, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் மார்க்கண்டேயன்.

 

 

அ.ம.மு.கவின் தென் மண்டல பொறுப்பாளரான மாணிக்க ராஜாவும், மார்க்கண்டேயனும் நெருங்கிய நண்பர்கள். ஒருவேளை இடைத் தேர்தலில் ஜெயித்து அ.ம.மு.கவிற்கு மார்க்கண்டேயன் தாவி விடுவாரோ? அல்லது தேர்தலுக்கு முன்னதாகவே அணி மாறிடுவாரோ? என்ற சந்தேகம் கிளை செயலாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.