Skip to main content

'வந்தது அந்த நாள்'- வி.சாலையில் குவியும் தொண்டர்கள்

Published on 27/10/2024 | Edited on 27/10/2024
nn

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தன.

இந்த மாநாடு தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் விஜய் மூன்று முறை கடிதங்கள் வாயிலாக தொண்டர்களுக்கு பல்வேறு வலியுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் வைத்திருந்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக குழந்தைகள், சிறுவர்களை மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டாம், வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் மாநாட்டை பார்க்கலாம். மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில் மீண்டும் ஒருமுறை நிர்வாகிகள் மூலம் விஜய் வலியுறுத்தல்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம்; குழந்தைகள் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்களை மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் விஜய் நேற்றே மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்ற நிலையில் அதிகாலை முதலே தொண்டர்கள் வி.சாலையில் குவிந்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்