Skip to main content

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு இடம் மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

highcourt

 

 

 

சென்னை ஷெனாய் நகர் பகுதியில் தன் வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி லட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் "சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் ஊழல், லஞ்சம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய லஞ்ச ஒழிப்பு பிரிவு தன் கடமையில் இருந்து தவறி விட்டது. எனவே தற்போது சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்வதாக உத்தரவிட்டார் . அதே வேலையில் டிஜிபியிடம் கலந்து ஆலோசித்து லஞ்ச ஒழிப்பு துறையின் நேர்மையான அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்

 

 

இந்த சிறப்பு லஞ்ச ஒழிப்பு குழுவை 4 வாரத்தில் அமைக்க வேண்டும் .லஞ்ச ஒழிப்பு புகார்களை பெற தனி கவுண்டர் சென்னை மாநகராட்சியில் ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாநகராட்சி அலுவலகங்களிலும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைக்க வேண்டும். அச்சு ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் இதுதொடர்பாக உரிய விளம்பரப்படுத்த வேண்டும்.மாநாகராட்சி அலுவலகங்களில் சிசிடிவி கேம்ரமாக்கள் வைக்க வேண்டும்.ரகசிய குழு அமைத்து மாநகராட்சி அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்.

 

 

 

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும் அவற்றை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதலாக ஒப்பீட்டு முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்தாக இருக்கும் பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும் ஊழல் தடுப்பு சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது கட்டப்பட்டு வரும் கட்டிட்டங்கள் நேரில் ஆய்வு செய்து அதில் சட்ட விரோதம் இருந்தால் அதற்கு அனுமதி வழங்கிய பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

பெரிய அளவிலான திட்டங்களில் உதவி பொறியாளர் இளநிலை பொறியாளர் செயற்பொறியாளர் மண்டல அலுவலர் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மேலும் விதிகள் மீறிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இவை அனைத்தையும் நிறைவேற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.