Skip to main content

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கரோனா- சென்னையில் 9 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு! 

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

 CORONA;786 people in Tamil Nadu today, 9,000 crossed in Chennai

 

தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு இன்று கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும்  கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14, 753 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9,364 பேர் இதுவரை கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 846 பேர் நலம் பெற்று  வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் கரோனாவால் இன்று 4 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்