Skip to main content

பட்டினிப்போராட்டம் நடத்தி சாகத் தயாராக உள்ளோம் - இசைக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Corona virus restriction trichy Musicians petition to collector

 

உலகம் முழுவதும் கரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவில் அதனைத் தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி, இந்நோயில் இருந்து காப்பாற்ற அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளையும் சட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது.

 

Corona virus restriction trichy Musicians petition to collector

 

தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தி தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு தடைகளை விதித்துள்ள தமிழக அரசு, மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அதனால் பலதரப்பட்ட மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேடை மெல்லிசைக் கலைஞர்களின் குடும்பங்கள் இன்று (12.04.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தங்களுடைய வாழ்வாதாரத்தை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். 

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், “மத்திய மாநில அரசுகள், திருமணம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி எங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்; பல்வேறு துறைகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கென்று ஒரு நல வாரியத்தை அமைக்க வேண்டும்; மாதம் 20 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், “எங்களுடைய கோரிக்கையை இந்த அரசு ஏற்க மறுத்தால், நாங்கள் குடும்பத்தோடு எங்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, தேர்தல் அடையாள அட்டை என அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்து, பட்டினிப்போராட்டம் நடத்தி சாகத் தயாராக உள்ளோம்” என்று இசைக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது