Skip to main content

கரோனா இரண்டாம் அலை... கிடைக்கும் வேலைக்கு செல்லத் தொடங்கிய உழைக்கும் சமூகம்!  

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
Corona Second Wave ... Working community that started to go to work available!

 

ஈரோடு மாநகர் பன்னீர்செல்வம் பார்க் அருகில் தனியாக ஜவுளி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள், 350க்கும் மேற்பட்ட வாரச் சந்தைகள் என 750 கடைகள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது. நேபாளம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கோவா, பீகார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் அதிகளவில் இந்த ஜவுளி சந்தைக்கு வருவது வழக்கம். 

 

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜவுளி வியாபாரிகள் வாரச் சந்தைக்கு வருவதும் வழக்கம். இதனால் ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் இந்த பகுதி விழாக்கோலம் போல் காட்சியளிக்கும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்பட விசேஷ நாட்களில் ஜவுளி சந்தைகளில் ஒவ்வொரு நாளும் ரூபாய் 3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். சாதாரண நாட்களில் ரூபாய் 1 கோடி வரை வியாபாரம் நடக்கும். ஜவுளித் தொழிலை நம்பி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். போன வருடம் ஏற்பட்ட கரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. 

 

இதனால் ஆயிரக்கனக்கான ஜவுளி  தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். பின்னர் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியதால் ஜவுளி சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்து உள்ளதால் மீண்டும் ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மாதமாக ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து ஜவுளி தொழிலாளர்கள் மாற்று யோசனையாக வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் கட்டிட வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

 

இது குறித்து ஈரோடு கனி மார்க்கெட் வாரச் சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறும்போது, "கரோனா தாக்கம் காரணமாக  மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜவுளி சந்தை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி வர்த்தகம் முடங்கிப் போயுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதமாக ஜவுளி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளதால் இதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த இடத்தை ஜவுளி தொழிலாளர்கள் பல்வேறு கூலி தொழிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் பலர் கட்டிட வேலைக்கும், செங்கல்  சுமப்பதற்கும், சித்தாள் வேலைக்கும் சென்று வருகின்றனர். தினமும் ரூபாய் 200 முதல் ரூ. 500 வரை அவர்களுக்கு கூலி கிடைக்கிறது . விரைவில் ஜவுளி சந்தை திறக்க அனுமதித்தால் மட்டுமே பிழைக்க முடியும். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது இ.எம்.ஐ செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை சலுகை இல்லை. ஜவுளித் தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

கரோனா ஊரடங்கால் பசியை போக்க கிடைக்கும் வேலைக்கு செல்லத் தொடங்கி விட்டனர் உழைக்கும் சமூகம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.